பொருளாதார மோசடி செய்துவிட்டு ஓடியவர்கள் சொத்துக்களை அரசே எடுக்கும்

Image may contain: 1 person

 

லண்டனில் மோடி முன் மல்லையா சிகரெட் பிடித்து புகை விட்டாரோ அல்லது “கியா ரே விட்டல் மவன் ஒத்தையில நிக்கேன்” என வசனம் பேசினாரோ என்னமோ தெரியவில்லை

இந்தியா திரும்பிய மோடி விமானத்தில் இருந்து இறங்கியவுடன் பொருளாதார மோசடி செய்துவிட்டு ஓடியவர்கள் சொத்துக்களை அரசே எடுக்கும் என அறிவித்துவிட்டார்.

ஒரு பொருளாதார குற்றவாளி தங்கி இருக்கும் வல்லரசு நாட்டிற்கு சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்பியவர் என்ற அவப்பெயரை அவர் இச்சட்டம் மூலம் துடைத்துவிட்டார்

இதனை நிச்சயம் வரவேற்கலாம், மல்லையா வாழும் லண்டன் சென்றுவந்துவிட்டு இப்படி சட்டமியற்றுவது நிச்சயம் பல விஷயங்களை மறைமுகமாக சொல்வது, வாழ்த்துக்கள் மோடி

ஒருவகையில் பார்த்தால் நல்ல சட்டம் இது,

அதற்காக ஓடுபவர்கள் ஓடலாம் ஆனால் சொத்துக்களை தரமாட்டோம் என்ற அர்த்தமல்ல‌

இவ்வளவு சட்டமிடுபவர்கள் அப்படி ஓடும் நிலையில் இருப்பவர்களுக்கும் சில கடிவாளம் இட்டிருப்பார்கள்

எப்படியோ இனி வெளிநாட்டு டூர் போகின்றேன் என சொல்ல்விட்டு கம்பிநீட்டும் தொழிலதிபர்கள் இனி அஞ்சுவார்கள், ஓடுவதாக இருந்தால் மொத்த சொத்தையும் விற்றுவிட்டுத்தான் ஓடவேண்டும் அப்படி ஒரு விஷயம் தொழிலதிபருக்கு சாத்தியம் இல்லை, அது சிரமமிக்கது

இன்றைய நாள் மோடிவாழ்வில் பொன்னாள், அட்டகாசமான சட்டங்களை எல்லாம் போட்டுகொண்டிருக்கின்றார்

இனி என்ன சட்டம் போடுவார் என தெரியவில்லை, அப்படியே காவேரிக்கும் ஒரு அதிரடி முடிவு கொடுத்தால் மிக்க நல்லது

இன்னொரு சட்டம் அவசியமாக தேவை, தமிழகத்தில் பாஜக எனும் கட்சியினை எதிர்க்கின்றோம் எனும் பெயரில் , இந்திய பிரதமர் பதவியினையே எதிர்கின்றோம், இந்தியாவினையே எதிர்க்கின்றோம், இந்திய பிரதமர் எனும் கண்ணியமிக்க பதவியினை கண்டபடி விமர்சிப்போம் என ஒரு கும்பல் கிளம்பி இருக்கின்றது

பாரதமாதா கற்பழிக்கபடுகின்றாள் என்றெல்லாம் கிளம்புவது நிச்சயம் சரி அல்ல, இன்னொரு நாடு என்றால் போட்டு சாத்தியிருப்பார்கள்

இந்த அழிச்சாட்டிய கும்பலை கட்டுபடுத்த ஒரு அவசர சட்டம் தேவை, இவர்களின் எல்லை மீறிய அட்டகாசத்தை உடனே ஒடுக்குதல் வேண்டும்