பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? – ஸ்டாலின் அறிக்கை

மிக சரியான கேள்வியினை எழுப்புகின்றார் ஸ்டாலின், தமிழகத்தில் பல கட்சிகள் கள்ள மவுனம் காக்கும் பொழுது எதிர்கட்சி தலைவர் மிக பொறுப்பான கேள்வியினை கேட்டிருப்பது மிக நல்ல விஷயம்

நீதி கிடைக்கும் வரை அவரின் போராட்டம் தொடரட்டும், அவருக்கு துணை நிற்க வேண்டியது தமிழகத்தார் கடமையாகும்

தன் இயலாமையின் உச்சத்தில் அப்பெண் கண்ணீர் மல்க “உன்னை நம்பித்தானே வந்தேன்?” என்றும், “அடிக்காதிங்க…………. என்றும் கையறு நிலையில் மனம் உடைந்து அழும் அழுகையினை கடந்து செல்ல முடியவில்லை

பெண்கள் அழும் தேசமும் வீடும் வாழாது என்பார்கள்

தெய்வங்களோடு தமிழ்நாடும் தலைகுனிந்து நிற்கும் நேரமிது