பொள்ளாச்சி குஷ்பூவால் அழகாச்சி…
அழகான கனவிலே வாழ்ந்தவன் பாரதி, அவனி கற்பனையும் எதிர்பார்ப்பும் அவனுக்கு அவ்வப்போவது மகிழ்வினை கொடுத்தன, பெரும் பராரியாக வாழ்ந்த அவன் , தன் ஏக்கத்தை எல்லாம் கவிதையாகவே வடித்து வைத்தான்,
தனது அபிமான ஓய்விடம் எப்படி இருக்க வேண்டும் என அவன் எழுதியது இப்படித்தான்
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
அழகான மழைத்தூறல் விழும்பொழுதெல்லாம், தென்றல் தழுவி செல்லும் பொழுதெல்லாம், கடற்கரையோரம் நின்று நிலவோளியினை காணும் பொழுதெல்லாம் இப்பாடல் தான் நினைவுக்கு வரும்
நமக்கும் அப்படியான ஆசை எல்லாம் உண்டு, பாரதி கண்ட இந்த ஆசைகளோடு இன்னொரு வரியும் உண்டு
ஆம், பாரதி கண்ட இந்த ரம்மிய சூழலில் அமர்ந்திருக்கும் பொழுது, குஷ்பூவின் படம் ஒன்று அங்கே வரையபட்டிருக்க வேண்டும், டிவியில் குஷ்பூ படம் ஓடிகொண்டிருக்க வேன்டும், அது இல்லாமல் அழகு நிறைவு பெறா.
இப்படி காணி நிலம் வேண்டும் என நாமும் பாடிகொண்டிருக்கும் பொழுது, குஷ்பூவும் காணி நிலம் தேடி பொள்ளாச்சி பக்கம் சென்றிருக்கின்றார்
பாரதியின் கனவினை நிறைவேற்றும் அற்புதமான இயற்கை அழகு கொண்ட பூமி அது, இப்பொழுது குஷ்பூ சென்றதால் இன்னும் அழகு கூடியிருக்கின்றது, பூரண அழகினை பொள்ளாச்சி பெற்றிருக்கின்றது
பொள்ளாச்சி குஷ்பூவால் அழகாச்சி…