போக்குவரத்து என்பது வாழ்க்கையின் உயிர்நாடி
இழுத்து இழுத்து விளையாட இது ஒன்றும் பழனிச்சாமி கோஷ்டிக்கும் பன்னீர் கோஷ்டிக்குமான பேச்சுவார்த்தை அல்ல
காலம் சென்றால் சரியாகும் என்பதற்கு மன்னார்குடி குடும்ப பிரச்சினையும் அல்ல
காலில் விழுந்து தப்ப இது வருமான வரி சோதனையோ அல்லது மத்திய அரசின் பிரச்சினையும் அல்ல.
ஆளுக்கு 5 ஆயிரம் கொடுத்து ஆட்டோவில் அனுப்ப இது ஆர்.கே நகரும் அல்ல…
மறைத்து தீர இது அப்பல்லோ மர்மமும் அல்ல,
ஏய் சிங்களமே உன்னை கண்டிக்கின்றேன் என டெல்லிக்கு கடிதம் எழுத மீணவர் பிரச்சினையோ அல்லது கோர்ட்டுக்கு செல்ல காவேரி பிரச்சினையோ அல்ல..
அவன் ஆடிகாரில் போனால் என்ன, டிராக்டரில் போனால் என்ன என சொல்ல அய்யாகண்ணு பிரச்சினையும் அல்ல
இந்த போக்குவரத்து என்பது வாழ்க்கையின் உயிர்நாடி, பொது போக்குவரத்துதான் தமிழகத்தின் ரத்தநாளம், எல்லோருக்கும் நாஞ்சில் சம்பத் போல இன்னோவா கார் கொடுக்கவா முடியும்?
விரைந்து தீர்க்கவேண்டிய இந்த விஷயத்தில் தமிழ அரசு தன் வழக்கமான , மவுன மர்ம கொள்கையினை கடைபிடித்தால் அல்லது எவ்வளவு திட்டினாலும் தாங்கும் எருமை கொள்கையினை கடைபிடித்தால் அது மக்களின் பொறுமையினை எல்லை கடக்க வைக்கும்
விழித்து கொள்ளாவிட்டால் பழனிச்சாமி அரசு பிழைத்துகொள்ளாது, நிலமை அவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கின்றது
இந்த பொறுப்பற்ற அமைச்சர்களுக்கு பதவிபிரமாணம் செய்துவைத்த அந்த ஆளுநரை முதலில் நாலு கேள்வி கேட்க வேண்டும்,
அதுவும் பலமுறை பதவி பிரமாணம் வேறு..