போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார்
போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார், அது என்ன வட அயர்லாந்து
முன்பு பிரிட்டனில் இருந்த பகுதி அது, ஆங்கிலிக்கன் சபை ஆதிக்கம் நிறைந்த பிரிட்டனில் இருந்து அந்த கத்தோலிக்க நாடு பிரிந்தது
அந்த கத்தோலிக்க நாட்டிற்குத்தான் கத்தோலிக்க சபை தலைவரான போப் சென்றிருக்கின்றார், அவர் சென்றது விஷயம் அல்ல, அங்கு அவர் சொல்லி இருப்பதுதான் விஷயம்
சிறுவர்கள் மேல் காம சேட்டை புரியும் பாதிரிகள் பற்றி மிக வருந்தி இருக்கின்றார், அதற்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார்
கத்தோலிக்க பாரம்பரியபடி போப் கிறிஸ்துவின் பிரதிநிதி, கிறிஸ்து என்ன சொன்னார்?
“சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், சிறுவர் சிறுமியர் போல் மாறாத எவனும் பரலோகத்திற்கு வரமுடியாது”
ஆம் சிறுவர்களை அவர் அந்த அளவு நேசித்தார்
ஆனால் அவர் வழிவந்ததாக சொல்லும் பாதிரிகள் இந்த அயோக்கிதனத்தை செய்திருக்கின்றார்கள், படுபாவிகள்
இவர்கள் வணங்கியதோ கிறிஸ்துவினை ஆனால் செய்திருப்பது சாத்தானும் அஞ்சும் கொடூர விஷயங்களை
போபாண்டவர் மன்னிப்பு கேட்டது பெரிய விஷயம் என்றாலும் இனி தேவாலயத்தில் அப்படி நடக்காது என சொன்னாலும் அந்த கருப்பு பாதிரிகள் மேல் நடவடிக்கை ஏதுமில்லை
அதாவது அவர்கள் திருப்பலி நிறைவேற்ற தடை என்றோ, பாவமன்னிப்பு ( பாவிகள் எப்படி பாவமன்னிப்பு கொடுப்பது?) கொடுக்க தடை என்றோ ஏதுமில்லை
உச்சமாக அவர்கள் மேல் சட்டபடி நடவடிக்கை என ஏதுமில்லை
இயேசு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்தார், ஆனால் சிறுவர் சிறுமியரை பற்றி சொல்லும்பொழுது அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்களை கடலில் கல்லை கட்டி தள்ளுங்கள் எனவும் சொல்லி இருக்கின்றார்
கல்லை கட்டி கடலில் தள்ள வேண்டாம், மாறாக கையில் விலங்கிட்டு உள்ளே தள்ளலாம் அல்லவா?
போப் செய்யவில்லை, அவரின் அரசாங்கத்தில் அதற்கு அனுமதி இல்லை போலும்
பாதிரிகள் இப்படி திணவெடுத்து அலைய முதற்காரணம் அவர்களுக்கு கொடுக்கபடும் சகல வசதிகளும், குத்துசண்டை வீரனுக்குரிய உணவும்
துறவிக்குள்ள கட்டுபாடுகளை உணவு முதல் கட்டாந்ததை வரை உறங்க கொடுத்து பாடாய்படுத்தினால் ஒழுங்கான சாமியாக இருப்பார்கள்
இல்லாவிட்டால் இவர்களை திருத்தமுடியாது
கிறிஸ்தவம் தன் சபையில் மிகபெரும் கட்டுபாடுகளை விதிக்கும் நேரம் இது, போப்பாண்டவர் அதை செய்யலாம்