போயஸ் கார்டன் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலமையகம்
போயஸ் கார்டன் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலமையகமாக இருந்திருக்கின்றது, கொஞ்சமும் மனசாட்சியின்றி இவர்கள் முறைகேடான வழியில் பணத்தை குவித்திருக்கின்றார்கள்
கருப்புபணத்தை வெள்ளையாக்கவே கம்பெனிகள் தொடங்கபட்டிருக்கின்றன, அக்கம்பெனிகளின் முகவரியாக போயஸ் கார்டனே காட்டபட்டிருக்கின்றது”
இது நீதிபதி குன்ஹா தீர்ப்பில் எழுதிய வரிகள்
ஆக அந்த கொள்ளை கூட்டத்தின் தலமையகத்தில்தான் சோதனை நடத்துகின்றார்கள், அது கோவில் என்றும், யாரை கேட்டு சோதனை என சிலர் பொங்குவதெல்லாம் மாபெரும் அழிச்சாட்டியங்கள்
போயஸ்கார்டனை குறிப்பிட்டு ஒரு நீதிபதி மிக கடுமையாக தீர்ப்பு எழுதியபின்னும் இது கோவில், புண்ணியஸ்தலம் என சொல்லிகொண்டிருப்பவர்களை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப வேண்டும்.
காரணம் இவர்கள் செய்வதும் நீதிமன்ற அவமதிப்பு …
வருமானவரிதுறை பாஜகவின் அங்கம் ஆகிவிட்டதா? : காங்கிரசார் கேள்வி
என்று திமுகவினை மிரட்ட வருமானவரி துறையினை காங்கிரஸ் அரசு கையில் எடுத்ததோ? எப்படி ராமசந்திரனை மிரட்டி தனிகட்சி ஆக்கியதோ, அன்றே வருமானவரிதுறை என்பது மத்திய அரசின் கைபாவை ஆகிவிட்டது
தொடங்கி வைத்தது சாட்சாத் காங்கிரஸ்தான்.
சசிகலா குடும்பம் மீது கைவைத்தால் இவர்களுக்கு ஏன் எரிகின்றது? உள்குத்து இருக்குமோ?
நான் என்ன ஜோக்கரா? பத்திரிகையாளரிடம் ஆதங்கபட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ : செய்தி
அதானே, அவருக்கு கோபம் வராமல் எப்படி இருக்கும்?
அவர் மட்டும்தான் அங்கு ஜோக்கரா?
மிஸ்டர் செல்லூர் ராஜூ, இனி ஆதங்கபடும்பொழுது நான் மட்டும்தான் ஜோக்கரா என கேளுங்கள், சரியாக இருக்கும்
வைகுண்டராஜன் அலுவலகங்களில் ஜெயா சொத்துகுவிப்பு தொடர்பாக சோதனை நடத்தபடலாம் : பத்திரிகை செய்தி
இப்படி ஊரெல்லாம் சொல்லிவிட்டுத்தான் செய்வார்களா?
அதுவும் இதெல்லாம் நடக்கும் என அண்ணாச்சி அன்றே கணித்திருக்கமாட்டாரா?
அங்கெல்லாம் சோதனை செய்தால் “மண்” தான் கிடைக்கும்.