போராடிய பொதுமக்களை ரஜினி சமூக விரோதிகள் என சொல்லவே இல்லை : தமிழிசை
பட்டம் மேல் இந்தியா என எழுதி இருகின்றேன், என் ஆட்சியில் உயர்ந்திருக்கின்றது இந்தியான்னு நீங்க சொல்லணும் சரியா?
அதை எங்க ஆட்கள் ஊரெல்லாம் சொல்லி சந்தோஷபடுவாங்க..”
(பெட்ரோல் விலை உட்பட ஆயிரம் பிரச்சினை இருக்கும்பொழுது இவர் பட்டம் விட்டு விளையாடிகொண்டிருக்கின்றார்
இந்தியா எரியும்பொழுது மோடி பட்டம் விட்டார் என இனி வரிகளை மாற்றிகொள்ளலாம்)
போராடிய பொதுமக்களை ரஜினி சமூக விரோதிகள் என சொல்லவே இல்லை : தமிழிசை
ரஜினிக்காக ரஜினி ரசிகர்கள் முட்டுகொடுப்பது நியாயம், சம்பந்தமே இல்லாமல் தமிழிசை ஏன் வருகின்றது?
ரஜினியோ பழனிச்சாமி அரசுக்கு ரகசிய ஆதரவில் இருக்கின்றார்
ஆளாளுக்கு தூத்துகுடிக்கு அவன் வரவில்லை இவன் வரவில்லை என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
“தூளு கிளப்புறவன் தூத்துகுடி ஆளு” என ஆடிகொண்டிருந்த, அதிலிருந்து “தல” என அழைக்கபட்ட தறுதலையிடமிருந்து ஒரு சத்தமுமில்லை ஆறுதலுமில்லை
தல போல ஒரு …ம் வராது?
இதை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது,
இவரைத்தான் காணவில்லை என்றால் ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா, தூத்துகுடிகாரன்டா என சொல்லிகொண்டிருந்த சிங்கத்தையும் காணவில்லை
தியானம் செய்யும் ரஜினிக்கு கோபம் கொப்பளிக்கலாமா : தினகரன்
அதானே, தியாக தலைவி சின்னம்மா , ஜெயா கல்லறையில் அடித்தார்கள் அல்லவா? அதுதான் சாந்த சொரூபம்.
ரஜினி உழைத்த பணத்தில் 2 லட்சம் கொடுத்தார் ஒரு நியாயாம் இருக்கின்றது, மனைவியின் வாடகை பாக்கி கஷ்டத்திலும் பாதிக்கபட்ட மக்களுக்கு கொடுத்திருக்கின்றார்,
தினகரன் என்ன தொழில் செய்தார்? எங்கு சம்பாதித்தார்? இவர் அவரை கலாய்க்கின்றாராம்.
எஸ்.வி.சேகரைக் கைது செய்வதற்குத் தடையில்லை : உச்ச நீதிமன்றம்
ஏதோ போலிசும் அவரும் அரை அடி தொலைவில் உள்ளது போலவும், உத்தரவு கொடுத்தால் மறுநிமிடம் கைது செய்யபோவது போலவும் செய்திகள்
முதலில் அவரை தேடி கண்டுபிடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடட்டும்