போரியல் மேதை மோசே தயான்…

Image may contain: 1 person

வரலாற்றில் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ராஜராஜ சோழன், சீசர், ஆண்டனி என பலர் நிற்கின்றார்கள். எப்படி நிற்கின்றார்கள் என்றால் போர்களத்தில் அவர்கள் காட்டிய வீரம் அப்படி, அதைவிட முக்கியம் வியூகம்

வியூகம் என்றால் என்ன?

தங்களிடம் உள்ள ஆயுதம், அது தாக்கும் தூரம் அது கொடுக்கும் சேதாரம் இவற்றை கணித்து எதிரியின் நகர்வை கணித்து, விவேகமாக அதே நேரம் வீரமாக தாக்குவது கூடவே தகவல் தொடர்பு, பூகோள அமைப்பினை பயன்படுத்துவது, தகவல் தொடர்பு எல்லாமும் முக்கியம், ராணுவ உளவு மகா முக்கியம்

இப்படி எல்லாம் கலந்த மாவீரர்கள்தான் வரலாற்றில் நிற்கின்றார்கள், ஒன்று குறைந்தாலும் விஷயம் முடிந்தது

இதில் இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வித்தகன் ஒருவர் உண்டு. அலெக்ஸாண்டரும் நெப்போலியனும் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என வியக்க வைத்த நபர் அவர்

இஸ்ரேல் எனும் தேசம் இன்று தான் கலந்த போர்களில் எல்லாம் வெல்கின்றது என்ற பெயருக்கும், மேற்காசியாவில் அசைக்க முடியா சக்தியாக இருக்கவும் அவர்தான் காரணம்

பெரும் உயரத்திற்கு அதனை நிறுத்திவிட்டு சென்ற போரியல் மேதை அவர் என உலகம் ஒப்புகொள்கின்றது

மோஷே தயான். இஸ்ரேலியரின் காவல் தெய்வம். பைபிளின் தாவீதுக்கு பின் யூதகுலம் கண்ட மாவீரன்

அவர் பிறந்தது இஸ்ரேலிய கிபுட் பண்ணையில், அப்பொழுது ஓட்டோமன் சாம்ராஜ்யம் சிதறி பாலஸ்தீன் ஐரோப்பியர் கையில் சிக்கிய குழப்பமான நேரம், அக்கலவர சூழலிலே வளர்ந்தார், பெரும் படிப்பு இல்லை ஆனால் ராணுவத்தில் சேர்ந்த நாள் முதல் யுத்தம் இயல்பாய் வந்தது

அப்பொழுது இங்கிலாந்து பிரான்ஸ் படைகள் அப்பகுதியில் இருந்தன இரண்டாம் உலகப்போர் நேரம் 1941ல் பைனாகுலர் வழியே அவர் களத்தை கணித்தபொழுது ஒரு தோட்டா அவரின் பைனாகுலரை தாக்கி கண்ணில் தெரித்தது ஒரு பார்வை போனது

அதன் பின் ஒற்றைகண் மாயாவி ஆனார் தயான், அந்த கண்மூடி போட்டு பயமுறுத்தும் காட்சி கொடுத்தார்

1948ல் மே 14ல் இஸ்ரேல் உதயமானது, மே 15ல் தொடங்கியது யுத்தம். உலகிலே பிறந்த முதல்நாளே யுத்தம் சந்தித்த நாடு இஸ்ரேல்

எல்லோரும் திகைத்து நிற்க, சாதாரண கமாண்டரான தயான் யுத்த்தை நடத்தினார், இருக்கும் ஆயுதங்களை வைத்து படைகளை மூன்றாக பிரித்தார். ஒன்று தற்காப்பு ஒன்று தாக்குதல் ஒன்று தொலைதொடர்பு மற்றும் சப்ளை

இந்த யுத்தியில் மகா நேர்த்தியாக இஸ்ரேலியர் செய்த போர் அராபியர்களை தோற்கடித்தது. உலகம் அதிசயமாக இஸ்ரேலை கண்டது அப்பொழுதுதான். கிட்டதட்ட நெப்போலியன் கலவரத்தை அடக்கிய அதே காட்சிகள்

பதவி உயர்வு பெற்றார் தயான்

வங்க கடல் புயல் போல , ஜப்பானின் பூகம்பம் போல இஸ்ரேல் அடிக்கடி யுத்தம் சந்தித்த காலம் அது, துடைத்துவிடுவது என அரேபியா சூளுரைத்தது அன்று அவர்களிடம் ஒற்றுமையும் இருந்தது

1952ல் இஸ்ரேலுக்கு பொருளாதார நெருக்கடி, அப்பொழுது இஸ்ரேல் படையினை குறைத்தது. இதனை உணர்ந்த நாடுகள் சண்டைக்கு வர தற்காப்பு யுத்தம் நடத்தி வென்றார் தயான்

இக்காலத்தில் எகிப்தில் ஒரு சதாம் உசேன் இருந்தார். அவர் பெயர் நாசர். சூயஸ் எகிப்திற்கு சொந்தம் என சொல்லி வல்லரசுகளை அநாசயமாக எதிர்த்தார், சோவியத் யூனியனின் செல்லபிள்ளை ஆனார்

நமது ஊர் சிவாஜி கணேசனுக்கு எல்லாம் விருது கொடுத்தார் அல்லவா? அவரேதான்

அவரின் அபரிமிதமான படைபெருக்கம் மேற்காசியாவில் சிக்கலானது, இஸ்ரேலை விட 10 மடங்கு படைகளை பெருக்கி இருந்தார். அந்த எகிப்து இஸ்ரேலை நொறுக்க வாய்பிருந்தது

சூயஸ் கால்வாய் முடக்கபட்டால் இஸ்ரேல் துண்டிக்கபடும், மேற்கு கப்பல்கள் ஆப்ரிக்காவினை சுற்றி செல்வதற்கும் பெரும் காலம் ஆகிவிடும், சூயஸை மூடினால் இஸ்ரேல் சாகும். அந்த வியூகத்தில் இறங்கினார் நாசர்

யுத்தம் மூண்டது, மிகபெரும் எகிப்து ராணுவத்தை சொல்லி வைத்தார் போல் சமாளித்தது இஸ்ரேல், குறிப்பாக எகிப்தின் மாபெரும் விமான படையினை தரையிலே சாய்த்தது

அந்த பலம் முறிக்கபட்டபின் தரையில் சாகசம் காட்டினார் தயான். மிக சிறிய குழுக்களாக தன் படைகளை பிரித்தார். சூயஸில் எகிப்து தன் படைகளை நிறுத்தி வா மகனே வா என காத்திருக்க, யாருமே எதிர்பாரா வகையில் எகிப்தின் தெற்கு எல்லையில் யுத்தம் தொடங்கினார் தயான்

எகிப்து எதிர்பார்க்கவில்லை, அதிரடியாக எகிப்தின் பல பகுதிகளில் யுத்தம் தொடங்கி தயான் குழப்ப வேறுவழியின்றி சூயஸ் பகுதியில் தன் படையினை குறைத்தது எகிப்து, அதனை மிக அட்டகாசமாக முடக்கினார் தயான்

மாபெரும் எகிப்து சேனையினை தயானின் சிறிய ராணுவம் வீழ்த்தியது, ஏகபட்ட சாகசங்கள் நிறைந்த கதை அது. வீழ்த்திதோடு மட்டுமன்றி சீனாய் பகுதியினையும் கைபற்றியது இஸ்ரேல், சூயஸ் தானாய் திறந்தது

உலகை வியக்க வைத்த யுத்தம் அது, 4000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியருக்கு அடிமையாய் இருந்த யூதர்கள் வரலாற்றில் முதன் முறையாக அவர்களை வென்று பழிதீர்த்தார்கள்

இந்த போரில் தயானின் தளபதிகளாக இருந்தவர்கள் ஷிமன் பெரஸ் மற்றும் ஏரியல் ஷெரோன், அதாவது பின்னாளைய இஸ்ரேல prime ministers

இப்போரில் இஸ்ரேல் பெற்ற மாபெரும் வெற்றிக்கு பின் இஸ்ரேல் தேசத்து ராணுவ ஜெனரல் ஆனார் தயான்

உலகெல்லாம் அவரின் கீர்த்தி பெருகிற்று, எல்லா நாட்டு தளபதிகளும் , போர் கள நிபுணர்களும் அவரை மனதார ரசித்தார்கள். பல நாட்டில் இருந்து வந்து பாடம் படித்தார்கள்

பல இடங்களில் அக்காலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சண்டை நடந்த காலமது என்பதால் தயான் எல்லோருக்கும் தேவைபட்டார்

இந்நிலையில்தான் வியட்நாம் யுத்தம் நடந்தது, 1967ல் அமெரிக்க ஆலோசகராக வியட்நாம் சென்றார் தயான். ஒற்றைகண் மாயாவி வந்திருக்கின்றார் என்றவுடன் எதிர்தரப்பு கலங்கியது

தயான் இருந்தல் வியட்நாம் போர் நொடியில் நிற்கும் சாத்தியம் இருந்ததால் உலக வல்லரசுகள் அரேபியாற்கு கண்களை காட்டின‌

அந்த 6 நாள் யுத்தம் எனும் பிரசித்திபெற்ற யுத்தம் தொடங்கியது, அவசரமாக இஸ்ரேல் திரும்பினார் தயான் ஆனால் ரகசியம் காக்கபட்டது, தயான் இஸ்ரேலில் இல்லை என எதிரிகளை நம்ப வைத்தது இஸ்ரேல்

தயான் இல்லை என்றவுடன் எதிரிகள் இஸ்ரேலை சூழ்ந்தனர் 
எகிப்து மேற்கே, சிரியாவும் ஈராக்கும் வடக்கே, சவுதியும் ஜோர்டானும் கிழக்கே எகிப்து கப்பல்படை வடக்கே என சூழ்ந்து நெருக்கினார்கள்

தயான் இப்படி ஒரு சூழல் வரும் என எதிர்பார்த்து என்றோ திட்டம் வகுத்திருந்தார், முக்கியமாக இனி சண்டை என வரும்பொழுது எதை எல்லாம் , எப்படி பிடித்து இவர்களை கதற வைக்க வேண்டும் என்ற திட்டம் அவரிடம் இருந்தது

சண்டை நடந்தது வெறும் 6 நாளே

இந்த 6 நாட்களுக்குள் எகிப்தின் பொருளாதார நகரமான ஷியாங்கெ ஷேக், சிரியாவின் கோலன் குன்று என எதிரிகளின் பல பகுதிகளை பிடித்து அசத்தியது இஸ்ரேல், மகா முக்கியமாக ஜெருசலேம்

ஆம் அதுவரைஜெருசலேமில் இஸ்ரேலிய ஆதிக்கம் இல்லை, முதன் முதலில் அதை மீட்டு இஸ்ரேலோடு சேர்த்தவர் அவர்தான்

இஸ்ரேலியர் கூட அதை எதிர்பார்க்கவில்லை, அதற்கெல்லாம் வாய்பில்லை என்றே நம்பினர். தன் மனதிட்டத்தை யாருக்கும் காட்டாமல் சரியான நேரத்தில் செய்து பெரும் புகழ்பெற்றார்

தாவீது அரசனுக்கு பின் ஜெருசலேமினை யூதருக்கு கொடுத்த மாவீரன் அந்த மோஷே தயான்

இனி இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் என தேசம் அவரை கொண்டாடியது, இஸ்ரேல் ராணுவ பூர்வமாக வீழ்த்தபடா தேசம் என உலகம் ஒப்புகொண்டது, ஆனால் அரேபிய பகுதிகளோ வாய்பிற்காக காத்திருந்தனர்

இந்நிலையில்தான் 1970ல் அந்த பெண் பிரதமாரானார், கோல்டா மேயர். யூதபெண்களில் மகா உறுதியாவனர், இஸ்லாமிய பெண்கள் வேடத்தில் பாலஸ்தீனில் உளவாளியாக எல்லாம் இருந்தார்

ஒருமுறை தனி ஆளாக மாறுவேடத்தில் சென்று ஜோர்டான் அரசரை சந்தித்து எச்சரித்த தைரியமிக்க சாகசகாரி

அவர் பிரதமரானார், மோஷே தயான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்

நிச்சயம் தயான் பிரதமாகி இருக்கலாம், தேசம் என்ன உலகமே அதனைத்தான் எதிர்பார்த்தது ஆனால் தயான் அந்த பெண்ணுக்கு வழிவிட்டார்

அப்பொழுது அந்த 14 எதிரி நாடுகளும் ரகசிய திட்டம் தீட்டின, இஸ்ரேலை வெல்வது எப்பொழுது சாத்தியம் என்றால் இஸ்ரேல் சண்டை போடாமல் இருந்து அடிவாங்கினால் மட்டுமே சாத்தியம் என உணர்ந்தனர்

ஆம் அதற்கும் சாத்தியம் இருந்தது, இஸ்ரேலியர் மத விவகாரங்களில் இஸ்லாமியரை விட இறுக்கமானவர்கள். அவர்கள் சம்பிரதாயபடி பாவமன்னிப்பு நாள் என சிலகாலம் உண்டு

யோம் கியூப்பர் என யூதமொழியில் சொல்வார்கள், இஸ்ரேல் நாள்காட்டியில் 10ம் நாள் வரும். அன்று அவர்களின் பாவங்களுக்காக அசையாதிருப்பார்கள், கடும் விரதம் கடவுள் வந்தால் தவிர எழும்ப மாட்டார்கள்

அப்படி அவர்கள் விரதம் இருக்க, கடவுளும் மன்னிக்க தயாராகும்பொழுதுதான் 14 நாடுகளும் மறுபடியும் தாக்கின‌

சீனாய் எனக்கு என எகிப்தும், கோலன் எனக்கு என சிரியாவும், ஜெருசலேம் எனக்கு என ஜோர்டானும் ஆளாளுக்கு ஒப்பந்ததுடன் களம்புகுந்தார்கள்

விரதத்தில் இருந்தால் பாஷா ரஜினி போல, சில இடங்களில் அடிவாங்கும் ராமசந்திரன் போல அப்படியே இருந்துவிடுவது இஸ்ரேல் பாணி, அன்றும் அப்படித்தான் சண்டையிடாமல் இருந்தது

எதிர்களோ இஸ்ரேலுக்குள் வந்து கொடியேற்றுவது இனி இஸ்ரேல் இல்லை என சொல்லிகொள்வது. இஸ்ரேல் ராணுவ முகாம் முன்பு நின்று “உண்மையான யூதன்னா இப்போ வாடா சண்டைக்கு” என சவால்விடுவது என கடும் அழிச்சாட்டியம்

சுருக்கமாக சொன்னால் இஸ்ரேல் கைபற்றபட்டதாக அவர்களே அறிவித்தும் கொண்டார்கள்

சரியாக விரதம் முடிந்த மறுநொடி தன் ஒரே கண்ணை திறந்தார் தயான், அப்படி ஒரு தாக்குதல். எதிரிகளையும் காணோம் அவர்களின் கொடியினையும் காணோம்

அடித்த அடியில் எல்லோரும் அலறிகொண்டு ஓடி, சில பகுதிகளை மீட்க வந்து உள்ளதையும் இழந்தனர் எதிரிகள்

ஆயினும் கோல்டா மேயர் மேலும் தயான் மேலும் ஏகபட்ட கண்டனம் வந்தது, உளவு தகவல் சரி இலை தயான் முன்னேற்பாடாக இல்லை என கடும் குற்றசாட்டுகள்

இதனிடையே சீனாயினை திருப்பிகொடுத்து இஸ்ரேலும் எகிப்தும் சமாதானமாயின, தயான் அதனை எதிர்த்தார். கோலன் குன்றுகளும் திருப்பி கொடுக்கும் ஐடியா இருந்தது தயான் தடுத்தார்

எனினும் தான் முன்னேற்பாடாக இல்லை என சொல்லி தன் ராஜினாமா கடிதம் கொடுத்தார், இஸ்ரேல் அழுதது

நீங்கள் பிரதமராக இருங்கள் என கெஞ்சி கேட்டும், இல்லை அது தவறான வழிகாட்டல் என சொல்லி மறுத்தார்

எப்படிபட்ட மாமனிதன் அந்த தயான். அவர் சொன்னது அதுதான், “இது தேசம், இங்கு எல்லோரும் தன்னால் என்ன முடியுமோ, அந்த காரியத்தை செய்ய வேண்டும் சாகும் வரை செய்ய வேண்டும், பதவிக்கு ஆசையின்றி செய்ய வேண்டும்”

அதன் பின் இஸ்ரேல் ஆலோசகர் ஆனார், இந்த உகாண்டா இஸ்ரேலிய விமான மீட்பில் அவரின் ஆலோசன இருந்தது

ஈரானிய புரட்சியின் பொழுதே அவர் சில ஆலோசனைகளை சொன்னார், அமெரிக்கா கேட்கவில்லை கேட்டிருந்தால் இந்த ஈரான் அமெரிக்க சிக்கல் வந்திருக்காது, இன்றும் அமெரிக்கா வருந்தும் விஷயம் அது

மொரார்ஜி தேசாய் காலத்தில் வாஜ்பாய் பாதுகாப்பு மந்திரியாக இருந்தபொழுது பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிபில் இருந்தது, மாறுவேடத்தில் இந்தியா வந்தார் தயான்

ஒரே ஒரு விமானம் கொடுங்கள் பாகிஸ்தானின் அணுவுலைகளை அழித்துவிடலாம் அது உங்களுக்கும் நலம் எங்களுக்கும் நலம் என்றெல்லாம் சொன்னார்

மொரார்ஜி ஒப்புகொள்ளவில்லை, ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள், எங்களை விட உங்களுகுத்தான் ஆபத்து என சொல்லி சென்றார் தயான், இப்பொழுது அதுதான் நடக்கின்றது

இஸ்ரேல் எனும் நாட்டின் பாதுகாப்பினை கட்டியெழுப்பி ராணுவ முறையில் அந்நாடு மாபெரும் சக்தியாக இருக்க முதல் காரணம் தயான்

இன்று இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் மாற காரணமும் அவரே

இஸ்ரேலியருக்கு இரண்டாம் மோசஸ், இரண்டாம் தாவீது எல்லாம் அவரே

இன்று அந்த மாவீரனுக்கு போரியல் மேதைக்கு பிறந்தநாள், அத்தேசம் அவரை வாழ்த்துகின்றது

நாம் அலெக்ஸாண்டரை, நெப்போலியனை கண்டதில்லை அந்த குறையினை நம் கண்முன்னால் அசாத்திய நபர்கள் சாத்தியம் என நிரூபித்த போரியல் மேதை மோசே தயான். அவரின் சாதனை மிகபெரிது

இன்றும் எல்லா நாட்டு ராணுவபாடங்களில் அவருக்கு பிராதன இடம் உண்டு

(நல்ல வேளையாக தமிழக பாஜகவினருக்கு மோசே தயான் பற்றி கோல்டா மேயர் பற்றி தெரியவில்லை, தெரிந்தால் தமிழிசை கோல்டா மேயர், எச்.ராசா மோசே தயான் என்பார்கள்

அப்படி ஒரு செய்தி வந்தால் இஸ்ரேலியர் நாட்டை கலைத்துவிட்டு செங்கடலில் குதித்துவிடமாட்டார்களா?)