போர் பதற்றம் நீங்கிற்று
அமெரிக்காவிற்கு உலகெல்லாம் ராணுவதளம் உண்டு, இல்லை என்றால் உலக வல்லரசு எனும் நிலையில் அவர்கள் இருக்க முடியாது
அப்படி 28 ஆயிரம்பேர் கொண்ட தளம் வடகொரியாவில் உண்டு, முன்பு வடகொரிய அதிபர் மிரட்டபட்டபொழுது கூடுதல் படைகளும் அவர்களின் பிரதான தளபதி புரூக்ஸ் என்பவரும் அனுப்பபட்டனர்
புரூக்ஸ் என்பவர் மிகபெரும் கில்லாடி என்கின்றார்கள், வடகொரியா யுத்தம் நடத்தும் பட்சத்தில் அதை சமாளிக்க அனுப்பபட்டவர்
இப்பொழுது வடகொரிய அதிபர் காற்றுபோன பலூன் போல ஆகிவிட்டதாலும், அடிக்கடி தென்கொரிய அதிபரை சந்தித்து குலாவி டிரம்ப் அண்ணா என அடிக்கடி கடிதம் எழுதுவதாலும் அங்கு போர் பதற்றம் நீங்கிற்று
இதனால் அந்த புரூக்ஸை திரும்ப அழைக்கின்றது அமெரிக்கா, இது கொரிய பகுதியில் யுத்தம் இனி இல்லை என்ற அறிவிப்பாகும்
இனி புரூக்ஸை என்ன செய்வார்கள், அவரை ஈரான் பக்கம் அனுப்பாமல் இருந்தால் சரி
