ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி துறை சோதனை

ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி துறை சோதனை

மோடிக்கும், ஜெட்லிக்குமே இவ்வளவு அறிவு இருக்குமென்றால், செட்டியாருக்கு எவ்வளவு இருக்கும்? ஒரு துரும்பினை எடுத்துவிட முடியுமா? இவர்கள் இம்மாதிரி விஷயங்களில் தொடக்கபள்ளி என்றால் அவர் அனைத்துலக பல்கலைகழகம்..

அதென்ன ஐடி அதிகாரிகள் எல்லாம் தமிழகத்திலே ரெய்டு நடத்துகின்றார்கள், இந்த அம்மானி, டாட்டா, அதானி அலுவலகங்களில் எல்லாம் ஒரு சோதனையுமே நடக்காதா?

தென்னிந்தியாவில் பெரும் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில்தான் இருக்கின்றார், எந்திரன் 2.0 சம்பளம் எந்திரத்தாலும் எண்ணமுடியாது என்கின்றார்கள், அவர் மருமகனும் பல படங்களை தயாரிக்கின்றார்

அந்த வீட்டில் எல்லாம் சோதனை கிடையாதா?

அதிமுக, காங்கிரஸ் புள்ளிகளை தவிர தமிழகத்தில் யாருக்குமே வருமானம் வரவில்லையா?

வருமானவரிதுறையினை ஏவி அக்கால எம்ஜிஆரை மட்டும்தான் டெல்லியால் வளைக்கமுடிந்து காரியம் சாதிக்க முடிந்தது, எம்ஜிஆரின் தைரியம் அவ்வளவுதான். பின் ஜெயா, சசிகலா கும்பலும் அவ்வழியே

சர்க்காரியா கமிஷனால் என்ன முடிந்தது? இல்லை இன்னொரு கமிஷன் வந்து தொட்டுவிடத்தான் முடியுமா? மல்லு கட்டி நிற்கும் திமுக..

காங்கிரசோ, பாஜகவோ கட்சிகள் மாறினாலும் தமிழகம் மீதான‌ ஐடி ரெய்டு காட்சிகளும், மிரட்டல்களும் மட்டும் மாறவே இல்லை