மகதாயி ஆறு விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது’: பிரதமர் மோடி

மகதாயி ஆறு விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது’: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இந்த கன்னடம் இருக்கின்றதே , அதற்கு அதனை சுற்றி இருக்கும் எல்லா மாநிலங்களுடனும் நீர் தகறாறு உண்டு. ஆந்திரம், மராட்டியம், கோவாவுடன் பல உரசல்கள் உண்டு

தமிழத்துடன் கன்னடம் செய்யும் அட்டகாசங்கள் உலகறிந்தவை

இப்பொழுது காவேரி போலவே கோவாவின் மகதாயி எனும் ஆறுடன் கன்னடம் முரண்டு பிடிக்கின்றது, ஆனால் இந்த விவகாரத்தில் கோவாவின் பிடி ஓங்கி இருக்கின்றது

இவர்கள் மட்டும் ஒரு சொட்டு நீர் தமிழகத்திற்கு கொடுக்கமாட்டார்களாம், ஆனால் அவர்களுக்கு கோவா மட்டும் கொடுக்க வேண்டுமாம்

இப்பொழுது பிரச்சினை மத்திய அரசு பக்கம் கன்னடர்களால் திருப்பிவிடபட்டுள்ளது, மகதாயி விவகாரத்தில் கன்னடருக்கு மோடி துரோகம் இழைப்பதாக குற்றசாட்டு எழுகின்றது

இல்லை இல்லை இது அரசியல் என மோடி ஒப்பாரி வைக்கின்றார்

மோடி நல்லவர் என்றால் என்ன சொல்ல வேண்டும்?

“நான் ஏற்கனவே தமிழகத்திற்குத்தான் துரோகம் இழைக்கின்றேன் கன்னடத்திற்கு அல்ல‌

ஒரு பிரதமர் எப்படி கன்னடத்திற்கும், தமிழகத்திற்கும் சேர்த்து துரோகம் இழைக்க முடியும்? ஏ கன்னடர்களே காவேரியில் நான் தமிழகத்திற்கு இழைக்கும் துரோகம் எல்லாம் உங்களுக்காக” என்றால் தீர்ந்தது விஷயம்

இதை சொல்ல தயக்கம் என்றால் தமிழிசை பக்கம் கண்ணை காட்டிவிட்டால் போதும், அவசரமாக கன்னடம் கற்று அக்கா ஒரே இரவில் தன் பாணியில் அடித்து விடும்

இதற்கு போய் மோடி கலங்கிகொண்டிருக்கின்றார்.