மகாதீர் மலேசியாவின் பெரும் அடையாளம், மிகசிறந்த நிர்வாகி, கூர்மதி படைத்தவர்

Image may contain: 1 person, smiling, suit, glasses and indoor

ஒரு நாட்டின் தலையெழுத்து நன்றாய் இருந்தால் நல்ல தலைவர்கள் உருவாகி வந்து தாங்குவார்கள், நாட்டிற்கும் தலைவிதி இருக்கின்றது

அபடி மலேசிய பிரதமராக பொறுப்பேற்றுகொண்டார் மகாதீர் அவர்கள், உலகின் மிக மூத்த பிரதமர் அவர்தான்

டிரம்ப் முதல் மோடிவரை வாழ்த்துகின்றார்கள், நாமும் வாழ்த்துவோம்

நிச்சயம் மகாதீர் மலேசியாவின் பெரும் அடையாளம், மிகசிறந்த நிர்வாகி, கூர்மதி படைத்தவர்

மலேசியா வெள்ளையன் காலத்திலே சொர்க்கமாக திகழ்ந்தது சந்தேகமில்லை. செட்டியார்களும் இன்னும் பலரும் பெரும் செல்வாக்குடன் சம்பாதித்தனர்

அப்படிபட்ட மலேசியாவில் மலாய் மக்களின் ஏழ்மையான இன்னொரு பக்கத்தை அவர்தான் வெளிச்சம் போட்டு காட்டினார், அம்மக்களுக்காக குரல்கொடுத்தவர்களுள் அவர் முக்கியமானவர்

அதனால் அவர் சந்தித்த சர்ச்சைகளும் ஏராளம், அவ்வகையில் அவர் போராளி, தமிழக பாஷையில் சொல்வதாக இருந்தால் சமூக நீதி காத்தவர்

பதவிக்கு வந்தபின் மலேசியாவின் முகத்தை மாற்றினார்

மலேசியாவின் பெரும் வளம் மலை மற்றும் மழை, நிச்சயம் அது விவசாய நாடு. ரப்பரும் பாமாயிலும் அப்படித்தான் விளைந்தன, தாது மணல் ஏற்றுமதியும் முன்பு இருந்தது பின் இல்லை

மகாதீர் வெறும் விவசாயம் மட்டும் நாட்டை முன்னேற்றாது என்பதில் உறுதியாய் இருந்தார். தென்கொரிய, ஜப்பானிய பாணியில் தொழில்துறையினை ஊக்குவித்தார்

ஓரளவு கிடைத்த கச்சா எண்ணையினை சீர்படுத்தினார்

அவர் ஆண்ட 23 ஆண்டுகளில் மலேசியா புதுகோலம் பூண்டது, நவீனத்தை பறைசாற்றும் இரட்டை கோபுரம், புத்ரா ஜாயா நகரம், பினாங்க் பாலம், கணிப்பொறி நகரம் , நவீன பிரமாண்ட விமான நிலையம் எல்லாம் அவரால் உருவானது

ஒரு நாட்டின் தலையெழுத்து நன்றாய் இருந்தால் நல்ல தலைவர்கள் உருவாகி வந்து தாங்குவார்கள், நாட்டிற்கும் தலைவிதி இருக்கின்றது

அபடி மலேசிய பிரதமராக பொறுப்பேற்றுகொண்டார் மகாதீர் அவர்கள், உலகின் மிக மூத்த பிரதமர் அவர்தான்

டிரம்ப் முதல் மோடிவரை வாழ்த்துகின்றார்கள், நாமும் வாழ்த்துவோம்

நிச்சயம் மகாதீர் மலேசியாவின் பெரும் அடையாளம், மிகசிறந்த நிர்வாகி, கூர்மதி படைத்தவர்

மலேசியா வெள்ளையன் காலத்திலே சொர்க்கமாக திகழ்ந்தது சந்தேகமில்லை. செட்டியார்களும் இன்னும் பலரும் பெரும் செல்வாக்குடன் சம்பாதித்தனர்

அப்படிபட்ட மலேசியாவில் மலாய் மக்களின் ஏழ்மையான இன்னொரு பக்கத்தை அவர்தான் வெளிச்சம் போட்டு காட்டினார், அம்மக்களுக்காக குரல்கொடுத்தவர்களுள் அவர் முக்கியமானவர்

அதனால் அவர் சந்தித்த சர்ச்சைகளும் ஏராளம், அவ்வகையில் அவர் போராளி, தமிழக பாஷையில் சொல்வதாக இருந்தால் சமூக நீதி காத்தவர்

பதவிக்கு வந்தபின் மலேசியாவின் முகத்தை மாற்றினார்

மலேசியாவின் பெரும் வளம் மலை மற்றும் மழை, நிச்சயம் அது விவசாய நாடு. ரப்பரும் பாமாயிலும் அப்படித்தான் விளைந்தன, தாது மணல் ஏற்றுமதியும் முன்பு இருந்தது பின் இல்லை

மகாதீர் வெறும் விவசாயம் மட்டும் நாட்டை முன்னேற்றாது என்பதில் உறுதியாய் இருந்தார். தென்கொரிய, ஜப்பானிய பாணியில் தொழில்துறையினை ஊக்குவித்தார்

ஓரளவு கிடைத்த கச்சா எண்ணையினை சீர்படுத்தினார்

அவர் ஆண்ட 23 ஆண்டுகளில் மலேசியா புதுகோலம் பூண்டது, நவீனத்தை பறைசாற்றும் இரட்டை கோபுரம், புத்ரா ஜாயா நகரம், பினாங்க் பாலம், கணிப்பொறி நகரம் , நவீன பிரமாண்ட விமான நிலையம் எல்லாம் அவரால் உருவானது

இதனால்தான் கிழக்காசியாவில் மலேசியா முண்ணணி நாடாக திகழ்கின்றது

1998ல் மலேசிய பொருளாதாரத்தை மிக நுட்பமான முறையில் நெருக்கடியிலிருந்து காத்தார்

மகாதீரின் மிக முக்கியமான விஷயம் அவரின் எளிமை, சொந்தமாக கார் வோட்டுவதிலிருந்து தனி மனிதனாக ஷாப்பிங் வளாகத்திலும் நடந்து செல்வார்

இந்த எளிமையும் நாட்டு நலனில் அவர் காட்டிய அக்கறையும் அவர்பால் மக்களை நிறுத்திற்று, அவர் 15 ஆண்டு இடைவெளிவிட்டு அரசியலுக்கு வந்தாலும் பாஷா ரஜினியின் கரங்களை முத்தி செய்வது போல மகாதீரை வரவேற்று அமர்த்திவிட்டார்கள்

மனிதர் பதவி ஏற்றதும் ஜிஎஸ்டி முறை மாற்றபடும் அல்லது நீக்கபடும் என அதிரடி காட்டுகின்றார், அது அந்நிய முதலீடுகளை பாதிக்கின்றது என்பது அவரின் எண்ணம்

இன்னும் என்னவெல்லாம் அதிரடி காட்டுவாரோ தெரியாது, ஆனால் நிச்சயம் நல்லாட்சி தருவார், அவரால் முடியாவிட்டால் யாரால் முடியும்? என புன்னகை பூக்க சொல்கின்றனர் மலேசிய மக்கள்

92 வயதிலும் மலேசியாவிற்கு வழிகாட்ட வந்து நிற்கும் அவர் ஆச்சரிய மனிதர், அப்பழுக்கற்ற நாட்டு பக்தர்

பொதுவாக கிழக்காசிய நாடுகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் சில பொருத்தம் உண்டு

பிலிப்பைன்ஸின் இமெல்டாவிற்கு ஜெயலலிதாவிற்கும் அப்படி பொருந்தும்

தென் கொரியாவில் பெண் அதிபரும் அவர் தோழியும் அடித்த கொள்ளை ஏராளம், இருவருமே இப்போது சிறையில். தமிழக ஜெயா சசிகலா வரலாறும் இப்படி உண்டு

கம்போடியாவில் போல்பாட் என்றொரு இரண்டாம் ஹிட்லர் இருந்தான், முட்டாள்தனமான ஆட்சியும் கொலைகளும் ஏராளம்

அங்கிள் சைமனிடம் அந்த போல்பாட்டின் சாயல் உண்டு

இப்படியாக பல சாயல்களை காணமுடியும்

Image may contain: 1 person, glasses and close-up

அப்படி மகாதீரின் சாயல ஒருவரிடம் காணமுடியுமென்றால் அது ப.சிதம்பரம்

இருவருமே பொருளாதார புலிகள், விவசாயம் மட்டும் நாட்டை காக்காது தொழில்துறையும் வேண்டும் என சொல்பவர்கள்

இருவருமே மிக திறமையானவர்கள், அவர்களின் பொருளாதார கணிப்பு தவறாது

தமிழகம் நலம்பெற வேண்டுமென்றால் ப.சிதம்பரம் முதல்வராகட்டும், நிச்சயம் தமிழகம் செழிக்கும்

இதை சொன்னால் திராவிடம், பகுத்தறிவு, மாநில சுயாட்சி என ஆளாளுக்கு அடிக்க வருவார்கள்

சரி 60 வருடமாக ஆண்டு என்ன செய்தார்கள் என்றால் சொல்லதெரியாது

நிச்சயம் சிதம்பரம் தமிழகத்து மகாதீர், ஒரு வாய்ப்பினை அவருக்கு கொடுதது பார்த்தால் ஒன்றும் கெடாது அல்லது இன்னும் கெட்டு போக இங்கு என்ன இருக்கின்றது?