மகாதீர் முகமது அடித்து ஆடுகின்றார்
பெரும் எதிர்ப்பினை உலகில் ஏற்படுத்தி இருந்த மகாதீர் முகமது அடித்து ஆடுகின்றார்
பலவகையான நிர்வாக முறைகளுக்கு தடாலடி மாற்றங்கள்
முதலவாது ஜூனிலிருந்தே ஜிஎஸ்டி இல்லை என சொல்லியாயிற்று பழைய விற்பனை சேவை வரி விதிக்கபடுமாம்
பெட்ரோல் விலையினை இந்தியா தினமும் மாற்றுவது போல மலேசியாவில் வாரம் ஒருமுறை மாற்றிகொண்டிருந்தார்கள், இனி நிரந்தரவிலை மீறி விலைவாசி உயர்ந்தால் அரசு மானியம் உண்டு என அசால்ட்டாக அறிவித்தாயிற்று
இது போக 30 வருடத்திற்கு மேற்பட்ட சாலைகளில் உள்ள டோல்கேட்டினை அகற்றுவது குறித்து ஆலோசிப்பதாக சொல்லியிருக்கின்றார்
மலேசிய மக்களின் மனதில் பெரும் நம்பிக்கை எழுகின்றது
ஒருவிஷயம் உண்மை
நல்ல தலைவனும் நல்ல மக்களும் இருந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்
மக்கள் சரியில்லாமல் தலமை நன்றாய் இருந்தோ, இல்லை தலமை சரியாய் இருந்து மக்கள் பொது அக்கறை இன்றியோ இருந்தால் ஒன்றும் உருப்படாது
துரதிஷ்ட வசமாக இந்தியாவில் இரண்டுமே உருப்படி இல்லை