மக்கள் ஒத்துழைத்தால் ஏன் சட்டம் ஒழுங்கு கலையபோகின்றது
திருச்சியில் காவலர் உதைத்து கர்ப்பிணி பெண் பலி என இந்த ஊடகங்கள் எல்லாம் பெரும் கலவரம் செய்கின்றன
ஏதோ அந்த காவலர் யார் இங்கே கர்ப்பிணி என வீடுதேடி வந்து மிதித்தது போல் செய்திவெளியிடுகின்றன, உண்மையில் என்ன நடந்திருக்கின்றது
திருச்சியில் சாலை சோதனையில் காவலர் பணியில் இருந்தபொழுது ஹெல்மெட் போடாத கணவனுடன் அப்பெண் பைக்கில் வந்திருக்கின்றாள், காவலர் நிறுத்த சொல்லியிருக்கின்றார், அவன் நிறுத்தாமல் சென்றிருக்கின்றான்
தவறு இங்குதான் தொடங்குகின்றது
பொதுவாக சாலையில் காவலர்கள் சும்மா நிற்பதில்லை மாறாக தேடபடும் குற்றவாளிகள் எதிர்பாராமல் மாட்டுவார்கள், அல்லது சிக்காமல் இப்படி செல்வார்கள்
தான் நிற்கசொல்லியும் ஒருவன் நிற்காமல் சென்றால் எந்த காவலர் மூளையிலும் மின்னல் அடிக்கும், அப்படித்தான் அவர் விரட்டி சென்றிருக்கின்றார்
அவன் அப்பொழுதும் நிற்கவில்லை, மாறாக அந்த பைக்கினை விரட்டிசென்ற காவலர் அதனை மிதித்திருகின்றார்
அந்த பைக் சரிய அப்பெண் விழுந்து பின்னால் வந்த வாகனம் நசுக்கி இரு உயிரும் காலி
நிச்சயம் இது பெரும் தவறு. அவர் அவனை நிறுத்த முயற்சித்திருக்கலாம் அல்லது பைக் நம்பரை குறித்துகொண்டு அவர் வீட்டில் சென்று பிடித்திருக்கலாம்
அவரின் கடமை பொழுதில் இதெல்லாம் அவருக்கு நினைவுக்கு வரவில்லை
ஆக தவறு என்பது அப்பெண்ணின் கணவனிடத்தில் உள்ளது, ஹெல்மெட் போடாமல் போனது முதல் தவறு, காவலர் மறித்தும் நிற்காமல் சென்றது இரண்டாம் தவறு
கர்பிணிமனைவி பின்னால் இருக்கும்பொழுது கவனமாக செல்லவேண்டும் என்ற பொறுப்பு வேண்டாமா? சாகசம் காட்ட அதுவா நேரம்?
அவர் நிற்காமல் சென்றதில் காவல்துறை அலுவலர் தன் கடமைக்காக விரட்டியிருகின்றார் சரி, ஆனால் மிதித்து தள்ளியது தவறு
மிக தீவிரமான குற்றவாளியினை காவல்துறை தேடியிருக்கலாம், அப்பொழுது நிற்காமல் சென்ற இவர் மீது சந்தேகம் வந்திருக்கலாம் எனினும் வேறு வகையினை கையாண்டிருக்கலாம் , நிச்சயம் அப்பெண் கர்பிணி என்றெல்லாம் காவலருக்கு தெரிய வாய்ப்பில்லை
தவறு இருபக்கமும் இருகின்றது, முதல் தவறு அப்பெண்ணின் கணவருடையது
அதனை மறைத்த ஊடகங்கள், செய்திக்காக அந்த காவலரை போட்டு தாக்குகின்றன. அவர் வெண்டுமென்றே உதைத்தது போல் செய்தி வெளியிடுகின்றன, இது கண்டிக்கதக்கது
நிச்சயம் அந்த காவலர் இரண்டாம் குற்றவாளியே
கர்ப்பிணி மனைவியினை கண்ணும் கருத்துமாக கூட்டி செல்லாத அந்த கணவன் மீது உள்ள தவறை, அவளை வைத்துகொண்டு காவல்துறை தடுப்பை மீறி சாகசம் செய்ய முயன்றவனை பற்றி யாரும் பேசவில்லை
உணர்ச்சிவசபட்ட மக்கள் காவலரை சூழ்ந்து அடித்தார்களாம், பெரும் கலவரம் தடியடி என நிலமை சென்றிருக்கின்றது
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறை மட்டும் பாடுபடவேண்டும், பொதுமக்களுக்கு அக்கவலையே இல்லை என்பது எப்படி சரியாகும்?
சரியாக மக்கள் ஒத்துழைத்தால் ஏன் சட்டம் ஒழுங்கு கலையபோகின்றது
ஆக ஒருவன் செய்த சட்ட மீறலாலும், அதனை தொடர்ந்து ஒரு காவலர் தன் கடமையில் அவன் தப்பிவிட கூடாது என்ற அதீதத்தில் செயல்பட்டதாலும் பெரும் கலவரத்தை கண்டிருக்கின்றது திருச்சி
நல்ல ஊடகம் காவலருக்கு ஒத்துழைக்காததால் ஒரு குடும்பம் அழிந்த கதையினை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டலாம், அக்காவலரின் அத்து மீறலையும் கண்டிக்கலாம்
அதைவிட்டு முழுபழியும் காவலர் மீது சுமத்தி பெரும் பரபரப்பை எற்படுத்துவது என்பது அயோக்கியதனம், பொதுமக்களை தொந்தரவு செய்யும் விஷயம், இப்பிரிவில் இதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்