மக்கள் நீதி மய்யத்திற்கும் தமிழிசைக்கும் மோதல் முற்றுகின்றது
மக்கள் நீதி மய்யத்திற்கும் தமிழிசைக்கும் மோதல் முற்றுகின்றது
அதாவது மக்கள் நீதி மய்ய இணையதளத்தில் தமிழிசை இணைந்துவிட்டார் என கமல் தரப்பு சொல்கின்றது.
இது மகிழவேண்டிய விஷயமா? தமிழிசை தங்களோடு இணைந்தால் அதனை வெளியில் சொல்வார்களா? கமலஹாசன் கட்சி சுத்த வெவஸ்தை கெட்ட கட்சிபோல் இருகின்றது
ஆனால் தமிழிசையோ இல்லை அவர்கள்தான் அழைப்பு விடுத்தார்கள்,நான் முறைத்துவிட்டேன் என சொல்லிகொண்டிருக்கின்றார்
ஆக என்ன நடந்திருக்கலாம்
மக்கள் நீதி மய்யத்தை நோட்டம் விட அதன் இணைய தளத்திற்கு தமிழிசை சென்றிருக்கலாம், ஏதும் பட்டனை தட்டி தொலைத்திருக்கலாம்
இல்லை தமிழிசை பெயரில் பேக் ஐடி நுழைந்திருக்கலாம், டிரம்பிற்கே பேக் ஐடி உள்ள உலகம் இது
இதற்கெல்லாம் தமிழிசை ஏன் நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டும்?
எல்லாம் என் அட்மின் எனக்கு தெரியாமல் செய்த வேலை என சொல்லிவிட்டு சென்றால் என்ன?
பாஜகவின் மீதான சர்ச்சை எல்லாம் அட்மின்களால் வருவது என்பதை உலகம் தெரிந்துகொள்ளாமலா இருக்கின்றது
(இப்பொழுது முன்பு வந்த 1 கோடி மிஸ்டுகாலில் கமல் நம்பர் உண்டா என தமிழிசை தரப்பு தீவிர தேடலில் இருக்கின்றது…)