மச்சான்…சிங்கத்த சாய்ச்சிட்டாங்க மச்சான்….

Image may contain: 1 person, sunglasses

 உடன்பிறப்பே

நான் என் அனுபவங்களை எழுதியது எல்லாம் நெஞ்சுக்கு நீதி, இதோ என் அனுபவத்தில் பார்க்கின்றேன் கண்ணுக்கு நீதி.

1991 முதல் 1996 வரை இவர்கள் ஆடிய ஆட்டங்கள், தமிழ்நாட்டை சுரண்டிய சுரண்டல்கள் இன்னும் ஏராளமான சொல்லணா முறைகேடுகளில் தமிழகம் சிக்கியிருந்த பொழுதுதான், இனி தமிழ்நாட்டை மீட்டே தீரவேண்டும் என கழகம், மறைந்த மூப்பனார்,அன்பு தம்பி ரஜினிகாந்த், சிதம்பரம், சோ ராமசாமி எல்லோரும் இணைந்து செயலாற்றி, தமிழக மக்கள் ஒத்துழைப்போடு ஆட்சியினை நம்மிடம் ஒப்படைத்தார்கள்.

நாம்தான் நல்லாட்சி கொடுப்போம் என்ற நம்பிக்கையில் ஒப்படைத்தார்கள், ஒப்படைத்த மக்களுக்கு நல்லாட்சியோடு, 1991 முதல் 1996 வரை நடந்த கொள்ளை உண்மைகளையும் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருந்தது

அப்பொழுதுதான் இவர்களின் காட்டாட்சியால் தமிழகம் பாதிக்கபட்டது போலவே, தானும் பாதிக்கபட்ட சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள், பல நியாயம் வேண்டி நீதிமன்ற கதவுகள் தட்டபட்டன‌

ஆனால் எப்படி எல்லாம் தப்பமுடியுமோ அப்படி எல்லாம் தப்பினார்கள், எப்படி எல்லாம் இழுக்க முடியுமோ அப்படி எல்லாம் இழுத்தார்கள், ஒரு கட்டத்தில் இந்திய நீதிதுறையே சலிப்படைந்துவிட்டது, அப்படி எல்லாம் ஆடினார்கள்

பல வழக்குகளை உடைத்து வந்துகொண்டே இருந்தார்கள். பணம் 10ம் செய்யும் என்பார்கள், இவர்களிடம் 11ம் செய்தது 20ம் செய்தது, ஆம் 20 வழக்குகள் இல்லாமலே ஆயின‌

18 வருடங்களாக தொடர்ந்தது வழக்கு, மண்டேலாவிற்கு அடுத்தப்டி பெரும் பொறுமையினை உலகில் காத்தது நாம் தான்.

நீதியின் மேலும், தர்மத்தின் மேலும் அசையா நம்பிக்கை கொண்ட திமுக தொடர்ந்து போராடியது, எப்படியோ தமிழகத்தை ஏமாற்றி ஆளும் கூட்டத்தின் வழக்கு தமிழகத்தில் நடந்தால் நியாயம் கிடைக்காது என பெங்களூருக்கு மாற்ற சொன்னது கழகம்

அன்பழகன் மூலமாக பெங்களூருக்கு மாற்றபட்ட வழக்கில்தான், தர்ம தேவனின் கலியுக பிறப்பான குன்ஹா மிக அதிரடியான தீர்ப்பினை வெளியிட்டார், மொத்த தண்டனையாக அது அமைந்தது

ஆனாலும் தர்மன் இருக்கும் இடத்தில் சகுனி இருப்பானல்லவா?, அப்படி குன்ஹா எனும் தர்மவான் இருந்த இடத்தில் குமாரசாமி என்றொரு நீதிபதி எல்லோரையும் போகவிட்டார்.

இந்த அக்கிரமத்தை காண சகிக்காத கன்னட அரசே அதனை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது, அதன் தீர்ப்புதான் இப்பொழுது வெளிவந்திருப்பது

ஆக உடன் பிறப்பே கடந்த 20 ஆண்டுகளாக எப்படி எல்லாம் போராடி, நீதிமன்ற கதவுகளை தட்டி நியாயம் பெற்றிருக்கின்றோம் என்ற நெடும் போராட்டத்தை நீ அறிவாய்

கிட்டதட்ட ஒருவிதமனா சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி அந்த கூட்டத்தின் ஆட்டத்திற்கும், கொக்கரிப்பிற்கும் சட்டத்தின் துணையோடு முடிவு கட்டியிருக்கின்றோம்

அநியாயம் வாழ்வதில்லை, அக்கிரமம் ஆள்வதில்லை, தர்மம் தோற்போதில்லை என்பதை மனமார நம்பும் நாம், இதோ கண்ணெதிரிலே பார்க்கின்றோம்

அந்த தர்ம தேவன் குன்ஹா, காந்திக்கு அடுத்தபடியான மன உறுதியினை பெற்றவரான ஆச்சார்யா போன்றவர்களுக்கு கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்

நீங்கள் ஒரு மாநிலத்தை காப்பாற்றியிருக்கின்றீர்கள், 7 கோடி தமிழர்களின் வாழ்வினை விடுவித்திருக்கின்றீர்கள், தமிழக வரலாறு உங்களை மறக்காது

இன்று விடுபட்டிருப்பது கூவத்தூரில் சிக்கிய 130 எம் எல் ஏக்கள் மட்டுமல்ல, மொத்த தமிழகமும், நியாயமும், நீதியும், தர்மமும்

எந்த சிங்கமானாலும், எந்த கொம்பன் ஆனாலும் நீதிமன்ற துணையுடன் அடித்து நொறுக்கலாம், பாதிக்கபட்ட மாநில மக்களுக்கு நியாயம் கிடைக்கலாம் என நெற்றியில் அடித்து சொல்லியிருக்கும் தீர்ப்பு இது

வரலாற்றில் குறிப்பிடவேண்டிய தீர்ப்பு, சாதி ஒழிப்பிற்கும், இந்தி எதிர்ப்பிற்கும் அடுத்து தமிழ்கம் பெற்றிருக்கும் பெரும் நியாயம் இது

ஆக என் அருமை உடன்பிறப்பே, நியாயம் வென்றுவிட்ட இத்தருணத்தில், தர்ம தேவனின் ஒளி துலங்கிவிட்ட இந்த நேரத்தில் நம் அண்ணா சொன்னபடி “தடைகளை தாண்டிவிட்ட திருப்தியில் ஓய்வெடுக்க கூடாது, நாம் இன்னும் செல்லவேண்டிய தொலைவு உண்டு என்பதை மறக்க கூடாது” என்பதை நினைவு படுத்துகின்றேன்

சட்டம் தன் கடமையினை செய்துவிட்டது, நாம் நம் கடமைகளை செய்ய கிளம்புவோம், இந்த தமிழகத்திற்கு இன்னும் நாம் செய்யவேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கின்றது

அக்கிரமங்கள் ஒழிந்த இத்தருணத்தில் இன்னும் உற்சாகமாய் உழைக்க கிளம்புவாய்,

எழு, அங்கே உற்றுநோக்கு கொடுஞ்சதியும், பெரும்துரோகமும், யாரையும் காப்பாற்றமுடியாது என்பதை கண்ணார கண்டுவிட்ட பின்னும், யாராலும் நம் இயக்கத்தை அழிக்கமுடியாது என்ன பெரும் நம்பிக்கை கொண்ட பின்னும் ஏன் தயக்கம்?

தீமை ஒழிந்து திராவிடம் செழிக்கும் இத்தருணத்தில், இனியும் இப்படி ஒரு கும்பலை தமிழகத்தில் அனுமதியோம் என உறுதியேற்று, வாசல் தாண்டி உன்னோடு தமிழருக்க்கு உழைக்க கிளம்புகின்றேன் என் உடன்பிறப்பே.

பெரும் தடை உடைத்து பொங்கும் கங்கை பிரளயமாய் பொங்குவோம் வா..

இன்னும் அவர்களின் முகதிரையினை பல இடங்களில் கிழிக்க வேண்டியிருந்தால் அங்கும் கிழிப்போம் வா..

உடைக்கவேண்டிய மர்மங்கள் இருந்தால் அது தீரும் வரை அடித்து உடைப்போம் வா..

 

ஏம்பா நவநீத கிருஷ்ணா

Image may contain: 1 person, beard   

“தவறு செய்தவன் திருந்த‌ பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்”

என தலைவர் பாட்டை இப்பொழுது பாடு பார்க்கலாம்


 

எடப்பாடி பழனிச்சாமியினை முதல்வராக தேர்வு செய்தார் சசிகலா

சிறையில் இருந்து சில மாபியாக்கள்தான் வெளியில் விளையாடுவார்கள், இவர் ஆட்சி செய்ய போகின்றாராம்.

கட்சி இனி அவர் கட்டுப்பாட்டினை விட்டு சுத்தமாக சென்றுவிடும்.

ஜெயா இன்றி அதிமுகவில் வோட்டு வாங்கமுடியாது என்பதால் எல்லோரும் அஞ்சியிருந்தனர், இனி சசிகலா இருந்தால் வோட்டு வாங்கமுடியாது என்றபின் எது மிஞ்சும்?

பகல் கனவின் உச்சத்தில் இருக்கின்றார் சசிகலா, தனிமரம் ஆனதை இன்னும் உணரவில்லை அந்தோ பரிதாபம்..


ஏதோ ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்து ஏதோ ஒரு தொகுதி மக்கள் எல்லாம் ரிசார்ட்டில் அடைக்கபட்டு, நீச்சல் குளத்தில் நீந்திகொண்டே வாக்கு செலுத்தும் ஒரு அரிய காட்சியினையோ…

அல்லது அந்தமான் தீவுகளுக்கு கப்பலில் கடத்தபட்டு அங்கு தேர்தல் நடக்கும் காட்சியினையோ காணவிடாமல் இந்த உச்சநீதிமன்றம் தடுத்துவிட்டது

உச்சநீதிமன்றம் தீர்ப்பு மாறி வந்திருந்தால் தேர்தல் அப்படித்தான் நடத்தபட்டிருக்கும், தீவில் இருக்கும் மக்கள் தேர்ந்தெடுத்த எம் எல் ஏ நான் என நீதிமன்றத்தில் சசிகலா நின்றிருப்பார்.

இக்காட்சிகள் எல்லாம் காணமுடியாமல் போய்விட்டது, என்ன ஜனநாயக நாடு இது?

தொகுதி மக்கள் 10 கப்பலில் ஏறி கடல் சுற்றுலா கூட செல்ல வாய்பளிக்காத‌ நாடு?