மணிசங்கர அய்யர் விவகாரம்
ராஜிவின் தோழர், கேம்பிரிட்ஜ் படிப்பு என மிகசிறந்த தகுதிகளை கொண்டிருந்தவர் மணிசங்கர அய்யர்
அவரின் ஆங்கிலம் அவ்வளவு அழகானது, பாராளுமன்றத்தில் இதுவரை பேசிய பேச்சுக்களில் மிக அழகான பேச்சு எனும் வரிசையில் நிச்சயம் மணிசங்கர அய்யர் பேச்சும் வரும்
மகா ஆச்சரியமான ஆங்கில பேச்சு அவருடையது, 1960களிலே IFS தேறியவர். இந்திரா ராஜிவின் மரியாதைகுரியவராக இருந்தவர்
அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் திறமை இல்லாதோர் அல்ல, மணிசங்கர் அய்யர் அந்த வகை.
அவரின் ஆங்கில எழுத்துக்களின் கட்டுரைகள் பல கல்லூரிகளில் ஆங்கில வகுப்புகளில் பாடமாகவே வைத்திருக்கின்றார்கள்
உண்மையில் அவர் மிகபெரும் படிப்பாளி, ஆனால் படக்கென்று பேசிவிடுவார். இதனால் காங்கிரசின் சுப்பிரமணியன் சாமி என்ற அளவிற்கு சென்றுவிட்டார்
ராஜிவிற்கு பின் அவருக்கு கட்சியில் முக்கிய இடமில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசல் வேறு உலக பிரசித்தி பெற்றது என்பதால் அவர் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை
மிக உறுதியாக சொல்லலாம், காங்கிரசில் ஒதுக்கபடாமல் மிக நல்லமுறையில் பயன்படுத்தபட்டிருக்க வேண்டிய நபர் அவர், சில நாட்டு தூதராக, ஆளுநராக கூட அவரை நியமித்திருக்கலாம்
மகா பொருத்தமான நபர், ஆனால் சசிதரூரை தூக்கிபிடிக்கும் காங்கிரஸ் மணிசங்கர் அய்யர் போன்ற திறமையானவர்களை ஒதுக்கியே வைத்தது
காங்கிரஸ் எதைத்தான் உருப்படியாக செய்தது?
இப்பொழுது மோடியினை விமர்சித்து சிக்கிகொண்டார், அதாவது மோடி அம்பேத்கர் புகழ் பாடும் பொழுது, இவர் மோடி “நீச் ஆத்மி” என இந்தியில் சொல்லிவிட்டாராம், அப்படி என்றால் தீண்டதகாதவன் என பொருளாம்
மோடிக்கு போதாதா? இதற்காகவே காத்திருந்தது போல அய்யகோ என்னை சாதிபெயரால் திட்டுகின்றார்கள், நான் தீண்டதகாதவனா, ஏ குஜராத்தே எனக்கு நீதி சொல் என அங்கு கண்ணை கசக்கிவிட்டார்
இவர் வேறு அய்யரா? போதாதா விஷயம் பற்றி எரிகின்றது.
இது என்னடா வம்பு என திகைத்த காங்கிரஸ் மணி சங்கர அய்யரை தற்காலிக நீக்கம் என்ற அளவில் செய்துவிட்டது
இதில் உட்கட்சி அரசியல் இன்னபிற காரணங்களும் உண்டு
மனிதர் சிக்கலில் இருக்கின்றார் ,அவரோ எனக்கு இந்தி தெரியாது, எனக்கு தெரிந்த அரைகுறை இந்தியில் சொன்னது சிக்கலாகிவிட்டது, மன்னித்துகொள்ளுங்கள் என கேட்டாலும் மோடி கும்பல் விடுவதாக இல்லை
மணி சங்கர் அய்யர் போன்ற பெரும் படிப்பாளிகளை நோக்கும்பொழுது, இப்பொழுது அவர் சர்ச்சையில் சிக்கும்பொழுது எழும் கேள்வி ஒன்றுதான்
அவருக்கு எதற்கு அரசியல்?
எவ்வளவு பெரும் எழுத்துக்களை அவர் எழுதலாம், எவ்வளவு பெரும் சக்தி அவரிடம் இருக்க்கின்றது, ஏன் வீணாக இப்படி சிக்க வேண்டும்
அட பழனிச்சாமியே தன் எழுச்சி உரைகளை எழுதும்பொழுது இவருக்கென்ன?
காங்கிரஸ் ஒதுக்கினால் அவர் தாரளமாக இச்சிக்கல் தீர்ந்தபின் பாஜகவில் கூட இணையலாம்
தமிழக பாஜகவிற்கு அப்படி ஒரு நபர்தான் தேவை