மணி அய்யர் இன்று சிவலிங்கமும் இன்னும் பல இந்து அடையாளமில்லாமல் படமெடுக்கலாம்
மணி அய்யர் இன்று சிவலிங்கமும் இன்னும் பல இந்து அடையாளமில்லாமல் படமெடுக்கலாம், சோழ மன்னர்கள் வாயில் அடிக்கடி வரும் வார்த்தையான “சிவ சிவ” போன்றவற்றை மறைத்திருக்கலாம்
ஆனால் இதெல்லாம் இன்றல்ல 1940களிலே இங்கு விதைக்கபட்ட விதைகள்
அதுவும் எம்ஜி ராம்சந்திரனும், சிவாஜிகணேசனின் தொடக்க காலமான அரசர் காலத்து படங்களிலே வந்த காட்சிகள்
ஆம், அப்பொழுது அவர்கள் நடித்ததெல்லாம் தமிழக அரச கதைகள் , ஆனால் உடையெல்லாம் ரோமானிய , கிரேக்க அரசருக்குள்ளான ஆடைகள்.
எந்த பாண்டியனும் சோழனும் இப்படி மினிஸ்கர்ட் அணிந்து நின்றான்? எந்த தமிழ் மன்னன் குட்டை பாவாடையினை அணிந்திருந்தான்?
தமிழ் அரசர்கள் வேட்டி அணிந்து நெற்றியில் நீறு பூசி , கொண்டையிட்டு தலையிலும் கழுத்திலும் மாலை சூடி, மார்பெல்லாம் சந்தணம் பூசி வலம் வந்தனர்
அந்த காட்சிகளை அப்படியே வைத்தால் தமிழன் ஒரு இந்து என்பதை மக்களிடம் ஒப்புகொண்டதாகிவிடும் என அஞ்சிய திராவிட கும்பல் அல்லது அவர்களுக்கு பின்னால் இருந்த மிஷனரி கும்பல், ஏதோ கான்வென்ட் குழந்தையின் ஸ்கர்ட்டை மாட்டி கொண்டு நடிக்க வந்துவிட்டது
முதுகில் தொங்க வண்ணாந்துறையில் எடுத்து வந்த ஒரு ஜமுக்காளம் வேறு
அதை கைதட்டியும் ரசித்தான் தமிழன், அவனின் அறிவும் தன் இனமான வரலாறும் அப்படி இருந்திருக்கின்றது
தமிழ் மன்னனுக்குரிய எந்த அடையாளமும் இன்றி தமிழ் மன்னன் வேடத்தில் சீசர், அலெக்ஸ்டாண்டர் போல் நின்றார்கள் தமிழக நடிகர்கள், அங்கு திருநீறுமில்லை ருத்திராட்சமுமில்லை, வேட்டியுமில்லை சந்தணமுமில்லை
அப்படி ஒரு விபரீத கொடுமை அப்பொழுதே தமிழ்சினிமாவில் இருந்தது , இதையெல்லாம் தமிழன் ஏற்றுகொண்ட கொடுமைதான் அவர்கள் ஆட்சிக்கும் வந்து அட்டகாசம் செய்யுமளவு போயிற்று
சிவாஜி கணேசன் , கண்ணதாசன் போன்றோர் இந்த தமிழ் இந்து விரோத திராவிட பிடியிலிருந்து வெளிவந்ததாலே கொஞ்சமாவது நல்ல தமிழ் இந்துவரலாற்று படங்கள் ராஜராஜ சோழன் போல, திருவிளையாடல், திருவருட்செல்வர் போல கிடைத்தது
ஆம், மணிரத்னம் இன்று செய்வதை எல்லாம் ஒரு காலத்திலே அதாவது 1940 , 50களிலே திராவிட மிஷனரி கூட்டு களவானிகள் செய்யதொடங்கியிருந்தார்கள்


அருமை தல
LKG uniform செம… MGR costumes எல்லாமே அப்போது இந்த காலத்து நடிகைகள் போடும் costumes மாதிரி தான் யிருக்கும்
30 years ku mela ithu thaan nadakuthu tamil cinema worldla malayam cinema 100% poyachu enna seivathu
இப்படி ஒரு கோணம் உள்ளதே இப்போதான் தெரிகிறது….