மண்டல் கமிஷன் சட்டமாக்கபட்டு 27 ஆண்டுகள்
மண்டல் கமிஷன் சட்டமாக்கபட்டு 27 ஆண்டுகள் ஆனபின்பும் மத்திய அரசின் துறைகளில் பிறபடுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தவில்லை , இது நெஞ்சில் ஈட்டி பாச்சும் விஷயம் : மு.க ஸ்டாலின்
அதாவது இது சம்பந்தமாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டதாம், இதனால் விழித்துகொண்ட ஸ்டாலின் இன்னும் மத்திய அரசு துறைகளில் மண்டல் கமிஷன்படி இட ஒதுக்கீடு செய்யபடவில்லை என ஸ்டாலின் உணர அவர் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது
ஸ்டாலின் நெஞ்சில் இரண்டு ஈட்டி பாயும் செய்தி ஒன்று உண்டு
அதாவது இந்த 27 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக பங்குபெற்றிருக்கின்றது
இவர் ஏதோ 27 வருடம் பாஜக ஆண்டது போல குற்றச்சாட்டை வீசினால் , 17 ஆண்டுகள் நீங்கள் இருக்கும்பொழுது என்ன கிழித்தீர்கள் என அவர்கள் கேட்டால் என்னாகும்
எல்லாம் தமிழிசை அடிகளார் அப்படி எல்லாம் கேட்க மாட்டார் எனும் தைரியம்