மதசுதந்திரம் முழுமையாக கொடுத்திருக்கும் நாடு
நாம் முன்பே சொன்னதுதான், இந்நாடு மதசுதந்திரம் முழுமையாக கொடுத்திருக்கும் நாடுதான் ஆனால் அதை மிக தாரளாமக பயன்படுத்தி இம்சை செய்யும் கூட்டம் மேல் சில கட்டுபாடுகளை விதித்தல் வேண்டும்
இந்துக்கள் பெரும்பாலும் தங்களின் ஆலயத்தின் உள்ளேதான் பிரார்த்திப்பார்கள், இன்னொரு ஆலயம் கட்டுவது என்பது பொருட்செலவும் இன்னபிற சிக்கல்களும் கொண்டது என்பதால் பெரும்பாலும் பாரம்பரிய ஆலயங்களே
சிறுதெய்வ வழிபாடே அங்கு சிக்கல், அதை கட்டுபாடு இன்றி அவர்களால் எங்கும் தொடங்க முடிகின்றது. கல்லோ இல்லை தூணோ வைத்து ஒரு குங்கும சூடி வழிபட்டால் கோவில் ரெடி, தெய்வமும் வந்து அமர்கின்றது
சிக்கல் அவர்கள் வழிபாட்டில் இல்லை, அது யாருக்கும் தொந்தரவில்லை மிஞ்சி போனால் வருடத்தில் ஒரு நாள் கொடை முடிந்தது விஷயம்
சிக்கல் சாலை விஸ்தரிப்பு இல்லை பெரும் திட்டங்களை அமல்படுத்தும் பொழுது வரும், அந்த கோவில்களுக்கு பட்டாவோ முறையான ஆவணங்களோ இல்லாத நிலையில் அவை எதிர்காலத்தில் சிக்கல்
அவை முறைபடுத்தபட வேண்டும்
இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் மசூதியினை முறைப்படி அமைத்து தொழுவார்கள், எண்ணிக்கையும் அதிகமில்லை மிக மட்டுபடுத்தபட்ட எண்ணிக்கை கூட்டம் அதிகமானால் இருப்பதை விரிவுபடுத்துவார்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் அப்படியே
ஆனால் இந்த பிரிவினை மிஷினரி இம்சைகள் மத சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றன, புற்றீசல் கூட்டமாக , வெடித்துவிட்ட எருக்கம் பூவாக நினைத்த இடத்தில் நினைத்த நொடியில் அவர்களால் ஜெபவீடு அமைக்கமுடிகின்றது
அதுவும் பிறமத மக்கள் இருக்குமிடங்களில் கட்டுபாடே இல்லாமல் புகுந்து ஆலயங்களை அமைத்து இம்சை செய்ய முடிகின்றது
இதனையே எல்லா மதத்தாரும் செய்ய ஆரம்பித்தால் சமூகம் அமைதியாய் இராது, நாடு நாடாய் இராது
நாட்டை நேசிக்கும் ஓருவன் இவ்விஷயத்தில் என்ன சொல்வான் என்றால் நிச்சயம் புதிய வழிபாட்டு தலங்கள் அமைக்க கடும் கட்டுபாடுகள் தேவை
அது எந்த மதமாயினும் சரி
மிகுந்த கட்டுபாடுகள் மற்றும் நிபந்தனைகளுடனே வழிபாட்டு தலங்களுக்கான அனுமதி கொடுக்கபட வேண்டும், அனுமதியில்லா இடத்தில் வழிபாட்டு இம்சை செய்தால் தடை செய்ய வேண்டும்
சிறப்பு நாட்களுக்கு மட்டும் தனி அனுமதிபெற்று பொதுவிடங்களில் கொண்டாடிவிட்டு போகட்டும்
நினைத்த இடத்தில் எல்லாம் கோவிலும், ஜெபவீடும் இன்னும் ஏராளமான இம்சைகளை செய்து கொண்டிருப்பதை தடுக்க அவசர சட்டம் தேவை
அதை உடனே அரசுகள் செய்தால் நாடு நாடாக இருக்கும்
அவனவனுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் எதுவும் செய்யட்டும், அதுதான் உண்மையான மத சுதந்திரம்
நாட்டில் மக்களுக்கு மிக அளவுக்கு அதிகமான மத சுதந்திரம் உடலில் சேரும் அளவுக்கு அதிமாகன் கொழுப்பை போன்று மகா ஆபத்தானது
அதை கட்டுபடுத்தி வைப்பது ஒன்றும் தவறே இல்லை