மதன்லால் திங்காரா

அவன் பெயர் மதன்லால் திங்காரா, பஞ்சாபின் இந்து குடும்ப பிறப்பு 1883ல் அமிர்தசரஸில் பிறந்த அவன் கல்வியில் நன்கு தேறினான்

1904ம் ஆண்டு லாகூர் கல்லூரியில் பிரிட்டிஷ் துணியில் சீருடை கொடுக்கபட்டதை தைரியமாக எதிர்த்தான், உள்நாட்டு கதர் ஆடையில்தான் சீருடை அணிவேன் என அவன் சீறி நின்றதில் கல்லூரி நிர்வாகம் அவன் படிப்பை தடை செய்தது

அவன் தேசபற்று இயக்கங்களுடன் சேர்ந்து போராட சித்தமாயிருந்தான், அவன் பெற்றோரோ அவனை லண்டனுக்கு அனுப்பினார்கள் 1906ம் ஆண்டு எந்திர பொறியியல் படிக்க லண்டன் சென்றான்

அந்நேரம்தான் ஜார்ஜ் கர்சன் என்பவன் வங்கத்தை இரண்டாக பிரிந்து நாட்டில் பெரும் கொந்த்ளிப்பை ஏற்படுத்தினான், குதிராம் போஸ் போன்றவர்கள் போராட வந்து 16 வயதிலே அவன் கொல்லபட்டதெல்லாம் பெரும் கிளர்ச்சியினை நாடெங்கும் ஏற்படுத்தியிருந்தது

இந்த எழுச்சியினை அடக்க பல தந்திரங்களையும் கொடூர நடைமுறைகளையும் மேற்கொண்டனர் பிரிட்டிஷ் கிறிஸ்தவ ஆட்சியாளர்கள்

அந்த நேரம் பிரிட்டிஷ் இந்தியாவின் உளவு படை மற்றும் காவல் படையாக இருந்த கர்சன் வில்லி மிக கொடிய முகம் காட்டினான், அவனாலே இந்தியாவில் பல வகையான இரக்கமற்ற வழிகளில் போராட்டம் நசுக்கபட்டது

அவன் அடிப்படையில் ஒரு ராணுவ அதிகாரி, 1867ல் பிரிட்டிஷ் சார்பாக அனுப்பபட்டவன், பின் நிர்வாகத்திலும் ஆட்சியிலும் பங்கெடுத்தவன் பிரிட்டிஷ் எதிர்ப்பை நசுக்கும் பெரும் காரியத்தை இரக்கமின்றி செய்து கொண்டிருந்தான்

அப்பொழுதுதான் லண்டனில் வவேசு அய்யர், சாவர்க்கர், ஷியாம் கிருஷ்ணவர்மா ஆகியோர் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தனர், லண்டனில் வசித்து கொண்டு இந்தியரின் பிரச்சினையினை வெள்ளையன் அடக்குமுறையினை இதர ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் முன்னெடுத்து சென்றனர்

இந்தியா ஹவுஸ், அபினவ் பாரத் சங்கம் போன்ற இயக்கங்களெல்லாம் அப்பொழுது லண்டனில் வளர்ந்தன‌

அந்த இயக்கத்தில் சேர்ந்த மதன்லால் இரு கர்சன்களை வெறிகொண்டு தேடினான், ஒருவன் வங்கத்தை பிரித்த ஜார்ஜ் கர்சன் இன்னொருவன் இந்திய போராட்டத்தை கடுமையாக நசுக்கிய கர்சன் வில்லி

அந்நேரம் ஜார்ஜ் கர்சனை நெருங்கும் வாய்ப்பு மதன்லாலுக்கு கிடைக்கவில்லை, பிரிட்டன் சென்றிருந்த கர்சன் வில்லி ஒரு இடத்தில் நெருக்கமாக சிக்கினான்

அது லண்டனில் நடந்த இந்திய அமைப்பின் விழா, அதற்கு விருந்தினராக கலந்து கொண்டான் வில்லி. லண்டன் இம்பீரியன் மண்டபத்தில் 1909- ஆம் ஆண்டு ஜூலை 1 அவ்விழா நடந்தது

விழாவுக்கு வந்த வில்லியினை நேருக்கு நேர் நின்று சுட்டான் மதன்லால், அதுவும் 5 ரவுண்டுகள் சுட்டான். ஒரு இந்திய பார்சி வழக்கறிஞர் வில்லியினை காக்க முயன்றபொழுது அவருக்கும் சூடு விழுந்தது

அந்த இடத்திலே சுருண்டு விழுந்து செத்தான் கர்சன் வில்லி, மதன்லாலை பிடிக்க எல்லோரும் பாய்ந்தார்கள்

அவன் அசரவில்லை, “கொஞ்சம் பொறுங்கள் என் கண்ணாடியினை சரிசெய்கின்றேன்” என்றவன் கண்ணாடியினை சரி செய்துவிட்டு காவல் நிலையம் நோக்கி சென்றான்

சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான லண்டனிலே இந்தியாவின் பெரும்பொறுப்பில் இருந்த வில்லியினை குருவி போல சுட்டு கொன்றான் திங்காரா

இரண்டே மாதத்தில் அவனுக்கு மரண தண்டனைவிதிக்கபட்டது பின் இதே நாளில் ஆகஸ்டு 17ல் தூக்கிலிடபட்டான் என்ற செய்தி வந்தது ஆனால் அவன் மரணம் மிக கொடிதாய் இருந்ததாக ஆவணங்கள் உண்டு

அவன் கல்லறை மறைக்கபட்டிருந்தது, பின் கண்டெடுக்கபட்டு 1976ல் அவன் உடலின் எஞ்சிய பாகங்கள் இந்தியாவுக்கு கொண்டுவரபட்டு பஞ்சாபில் சமாதி எழுப்பபட்டது

இந்தியரை கொல்வோருக்கு அவர்கள் சொந்தநாட்டிலே பாதுகாப்பு இல்லை என முதலில் காட்டியவன் மதன்லால் பின்னாளில் வந்த உத்தம்சிங் இந்த வரிசையே

(இந்த கொலையில்தான் சாவர்க்கர், வவேசு அய்யர் போன்றோருக்கு மறைமுக தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்தது, இந்த இருவரும் பின் நெல்லை கலெக்டர் ஆஷ் கொலையிலும் சிக்கினார்கள்

இதனால்தான் சாவர்க்கர் அந்தமானில் அந்தபாடுபட்டார், வவேசு அய்யர் நெல்லைமாவட்டம் சேரன்மகாதேவியில் ஒரு ஆசிரமம் நடத்தி பெரும் சிரமபட்டார் அவரையும் ஈரோட்டு ராம்சாமி குதறிகொண்டிருந்தார் )

லண்டன் நீதிமன்றத்தில் மதன்லால் சொன்ன வாக்குமூலம் என்றென்றும் அவன் நாட்டுபற்றை சொல்லிகொண்டே இருக்கும், ஜூன் மாதம் 1909ம் ஆண்டு அவன் இப்படி முழங்கினான்

வெறும் 26 வயதில் தேசத்தின் விடுதலைகாக தன் மரணத்தை வரவேற்று அவன் முழங்கினான்

“என்னைப்பாதுகாக்க நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் எனது செயலின் நியாயத்தை நிரூபிக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை எந்த ஆங்கில நீதிமன்றத்திற்கும் என்னைக் கைது செய்யவோ, சிறையிலடைக்கவோ தூக்கிலிடவோ அதிகாரம் கிடையாது, நான் ஒரு சுதந்திரமான இந்தியன்

ஜெர்மானியர்கள் இந்த நாட்டை ஆக்ரமித்தால் அதை ஓர் ஆங்கிலேயர் எதிர்த்தால் அது தேசப்பற்று என்றால் ஆங்கிலேயருக்கு எதிரான எனது செயலும் தேசப்பற்றுதான்.

கடந்த 50 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 100,000,000 டாலர் செல்வத்தை எடுத்துச் செல்வதன் மூலம் 80 மில்லியன் மக்களைக் கொன்றது ஆங்கிலேயரே. ஜெர்மானியர்கள் இந்த நாட்டை ஆக்ரமிக்க உரிமை இல்லை என்றால் ஆங்கிலேயருக்கு எங்கள் நாட்டை ஆக்ரமிக்க உரிமை இல்லை.

எனது அன்னையான எனது தாய் நாட்டிற்கு அளிக்க என்னிடம் இருப்பது எனது இரத்தம் மட்டுமே. எனவே அதை நான் பலிபீடத்தில் அளிக்கிறேன். மீண்டும் அதே அன்னையின் வயிற்றில் பிறந்து அதே அன்னைக்காக உயிர்த்தியாகம் செய்ய விரும்புகிறேன்.

வந்தே மாதரம்….”