மதுபான விலையேற்றத்தை ஏற்றுகொள்ள முடியாது : முக ஸ்டாலின்
மதுபான விலையேற்றத்தை ஏற்றுகொள்ள முடியாது : முக ஸ்டாலின்
வழக்கமாக வெளியிடும் அறிவிப்பு போல அறிவித்துவிட்டார்
மதுவிஷயத்தில் என்ன நடக்கின்றது?
திமுக, அதிமுகவினர் இருவருக்குமே மது ஆலைகள் உண்டு. இருவர் கம்பெனி சரக்குகள்தான் டாஸ்மாக்கில் விற்கபடுபவை
முன்பு விஜய் மல்லையா விற்றுகொண்டிருந்தார், இவர்கள் விற்க ஆரம்பித்தபின் அவர் தொழிலே படுத்து அவரும் அடுத்த நாட்டுக்கே ஓடிவிட்டார்
அதாவது விஜய் மல்லையா அளவிற்கு இந்த கட்சிக்காரர்கள் சம்பாதிக்க ஆரம்பித்தாயிற்று
விஜய் மல்லையாவினை சரித்ததில் தமிழக கட்சிகளுக்கு பெரும் பங்கு மறைமுகமாக உண்டு
இப்பொழுது டாஸ்மாக்கிற்கு வரும் சரக்கில் பெரும்பான்மை திமுக ஆலை சரக்கு, காரணம் சசிகலாவின் மிடாஸில் வாங்கினால் தினகரனுக்கு பணம் வரும், வந்தால் நாஞ்சில் சம்பத் எல்லாம் சவால் விடுவார்
இப்பொழுது தினகரன் பக்கம் அமைதியாக மிடாஸின் வருமானம் குறைந்ததுதான் காரணம்
இப்பொழுது திமுக மது ஆலைகளில் அடைமழை சீசன், அள்ளுகின்றார்கள்
இது தெரிந்தும் ஸ்டாலின் சீறுகின்றாராம், ஒருவேளை கொள்முதல் விலையினை உயர்த்தவேண்டும் என்ற கட்சிக்காரர்களின் முணுமுணுபின் எதிரொலியாக இருக்குமோ?