மதுரையில் பாலில் சோப் ஆயில் கலந்திருப்பதாக செய்திகள் ….
மதுரையில் பாலில் சோப் ஆயில் கலந்திருப்பதாக செய்திகள் வருகின்றன
நூறுநாள் கெடாத பால், கொழுப்பு நீக்கபட்ட, மிக திக்கான பால் என செய்திகள் வரும்பொழுல்லாம் வராத பரபரப்பு இப்பொழுது வருகின்றதாம்,
சோப் ஆயில் 100 நாள் என்ன? ஆயிரம் நாள் ஆனாலும் கெடாது
இப்பொழுதும் அதற்கு அரசு இன்னும் தடை விதிக்கவில்லை, இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றதாம், மக்களாக இனி தடை விதித்தால்தான் உண்டு.
பாலின் கொழுப்பினை பிரித்து பலவாறு பயன்படுத்துவார்கள், அதில் சில சோப் போன்றவை தயாரிக்க துளியளவு கலப்பதாக சொல்வார்கள்
இப்பொழுது மகா திருப்பமாக சோப்பினையே பாலில் கலந்திருக்கின்றார்கள், இனி ஒருவேளை பாலில் பிரிந்ததைத்தான் பாலோடு சேர்த்தோம் என சொல்வார்களோ என்னமோ?
பால் மட்டுமல்ல, உப்பு, சீனி, சமையல் எண்ணெய் முதல் எல்லா உணவு பொருளும் இப்படி கலப்படமாகத்தான் வருகின்றன
அவற்றை எல்லாம் இப்படி சோதனை நடத்துவார்களா? அப்படி நடத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்..
பாலுக்கு மட்டும் அல்ல, எல்லா உணவுபொருளுக்கும் சோதனை தேவை என்பதே மாநில மக்களின் பெருவிருப்பம், அதனை இந்த அரசு செய்தால் நல்லது..
செய்வார்களா? அவர்கள் இந்த சோதனையினை ஏன் செய்ய போகின்றார்கள், அவர்கள் சோதனையே வேறு..
ஒவ்வொரு எம்.எல்.ஏவிற்கு தீக்குளிப்பு சோதனை செய்து அவர்களின் அதிமுக கற்பினை சோதித்து கொண்டிருக்கின்றார்கள், அந்த அடிமைகளும் நாளைக்கு ஒருவருக்கு தீக்குளித்து தங்கள் கற்பினை நிரூபிக்கின்றார்கள்.
தீக்குளிப்பு என்றால் கவுண்டமணி ஸ்டைலில் பூக்குழி போல, கரன்சி குளியலில் தங்கள் விசுவாசத்தை காட்டுகின்றார்கள், அந்த சோதனை நடக்கின்றது
இதில் பால் சோதனையே முழுவதுமாக வருமா என தெரியாது, உப்பு முதல் சமையல் எண்ணெய் வரை என்று சோதிக்க போகின்றார்கள்??