மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தை ….
மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தை , எம்ஜிஆர் பேருந்து நிலையமாக பழனிச்சாமி அரசு மாற்றிவிட்டதாம், சில சர்ச்சைகள் வருகின்றன
மாட்டு தாவணி என்பது மாட்டுக்கு தாவணி, சேலை எல்லாம் அணிவித்த இடம் அல்ல, அது தமிழரின் தொன்மையான பெயர்
அக்காலத்தில் மாட்டுவண்டிகளே பிராதனம், கால்நடை என்றால் அதற்கு புல், நீர் ஓய்வு எல்லாம் வழங்க வேண்டும் அல்லவா? அப்படி குறிப்பிட்ட இடைவெளியில் தாவாணிகள் இருந்தன
அங்கு ஓய்வெடுத்து மாட்டுக்கு தீனி போட்டு இளைப்பாற்றுவார்கள். மாட்டின் தாகத்திற்கு நீரும் தீனியும் கிடைக்கும் இடம் மாட்டு தாவாணி ஆயிற்று
காலம் கடந்தபின்னும் மதுரையில் அப்பெயர் அப்படியே இருந்தது, கலைஞர் கூட பழம்பெருமை மாறாமல் அது மாட்டுதாவணி பேருந்து நிலையம் என பெயரிட்டார்
இப்பொழுது பழனிச்சாமி அரசு அதற்கு எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயரிட்டுவிட்டதாம்
மாட்டு பெயரில் அழைக்கபட்ட பஸ்நிலையத்திற்கு ராமசந்திரன் பெயரினை என்ன அர்த்தத்தில் சூட்டினார்கள் என தெரியவில்லை, சில அர்த்தம் இருந்தாலும் இருக்கலாம்
இப்பொழுது திமுக இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றது, எப்படி கலைஞர் சூட்டிய பெயரை மாற்றலாம் என்கின்றார்கள்
கலைஞர் மாற்றா பெயர்களா?
மவுண்ட் ரோடு எனும் பாரம்பரிய சாலை “அண்ணா சாலை” ஆனது உட்பட ஏகபட்ட ஞானஸ்நானத்தை செய்தவர் கலைஞர்
அவர் காட்டிய வழியில்தான் இதுவும் நடக்கின்றது,
சர்சிவி ராமன் பெயரிலோ, சீனிவாச ராமானுஜன் பெயரிலோ அமைந்திருக்க வேண்டிய பல்கலைழகத்தை அண்ணா பல்கலைகழகம் என மாற்றியதே ராமசந்திரன்
பின் அவரின் அடிப்பொடிகள் எப்படி இருக்கும்?