மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதம் : பன்னீர் செல்வம்
இவரும் பழனிச்சாமியும் முன்பு மாதம் இருமுறை டெல்லிக்கு ஓடுவார்களாம், இப்பொழுது மட்டும் உண்ணாவிரதமாம்
ஏப்ரல் 1ல் உண்ணாவிரதம் இருந்தால் என்ன? மிக பொருத்தமாக இருக்கும்
மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும் – வைகோ
இவர் எப்பொழுதும் போர், போராட்டம் என சொல்லிகொண்டே இருப்பதால் முக்கியமான பிரச்சினைக்கு இவர் அழைத்தும் தமிழகம் திரும்பிபார்க்கவில்லை
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி- மு.க.ஸ்டாலின்
ஆமாம், அவர் கட்சி 30 எம்பிக்களும், 100 எம்.எல்.ஏக்களுடன் தமிழகத்தில் அசுரபலத்தில் இருக்கின்றது, இதில் கருப்புகொடி காட்டியவுடன் அவர் அஞ்சிவிடுவார்
அவரே தமிழகத்திற்கு கருப்புகொடிதான் காண்டிகொண்டிருகின்றார், இதில் இவர் வேறு கருப்புகொடியாம்
பழனிச்சாமி அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுத்துவிட கூடாது என்பதில் ஏன் இவ்வளவு கவனமாக இருக்கின்றீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?