மத்திய அரசு தரும் நிதி ஒழுங்காக பயன்படுத்தபடுகின்றதா….

மத்திய அரசு தரும் நிதி ஒழுங்காக பயன்படுத்தபடுகின்றதா என்பதற்காக ஆய்வினை ஆளுநர் நடத்துகின்றார் என சொல்ல தொடங்கிவிட்டார்கள்

இதனை சொன்னபின் ஆளுநர் எதிப்பு பின் முழு அயோக்கியதனமாக கருதபடும்

இம்மாநில நலதிட்டங்களில் மத்திய நிதியும் உண்டு, இதுகாலமும் அது வெளிவராமல் மாநில அரசியல்கட்சிகள் பார்த்துகொண்டன‌

காங்கிரசின் இளங்கோவன் இதுகுறித்து அடிக்கடி வலியுறுத்துவார், ஆனால் மேலிடம் கேட்காது

என்னமோ மாநில அரசின் முழுநிதியிலே இம்மாநிலம் இயங்குவது போல காட்சிகள் காட்டபடும்

அதனை காங்கிரஸ் அரசு தடுத்து, மத்திய அரசின் உதவியினையும் காட்டியிருக்க வேண்டும், செய்யவில்லை, காரணம் அரசியல்

இப்பொழுது பாஜகவிற்கு நேரம் உச்சம், தமிழகத்தில் அவர்கள் வென்று ஆகபோவதுமில்லை, அந்த வோட்டுக்களை அவர்கள் விரும்புவதுமில்லை

விரும்பியிருந்தால் தமிழிசை தலைவராக இருக்கமாட்டார்

அதனால் ரன்கள் பற்றி, விக்கெட் பற்றி கவலை இல்லாத பேட்ஸ்மேன் போல இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் அடிக்க ஆரம்பித்தபின்புதான் தெரிகின்றது, இங்கு பவுலரும் சரியில்லை, பீல்டிங் சுத்தமாக இல்லை

புரிந்து கொண்டார்கள், போதாதா?

இனி எல்லா வகை ஷாட்டுகளும் அடித்து நொறுக்குவார்கள் என்பது மட்டும் தெரிகின்றது.


மோடியின் 4 ஆண்டுகால சாதனை எதுவென சொல்ல முடியுமா? என்றொருவர் கேட்டிருந்தார்

இவ்வளவு பெரும்பான்மையிலும், அதுவும் உபியில் பாஜக மிருக பலத்தோடு அமர்ந்தபின்னும் ராமர்கோவில் கட்டாமல் இழுத்துகொண்டு செல்வது பெரும் சாதனைதான்.


யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார் பில்கேட்ஸ்

ஐரோப்பியர் தாக்குதல் சம்பவத்தால் தன் பெயரை கெடுத்துகொண்டிருந யோகி, மகா அவசரமாய் அதனை சரிசெய்கின்றாராம்

மிகபெரும் அரசியல்வாதியாக மாறுகின்றார் மனிதர்.