மத்திய அரசு நிகழ்த்தும் சாதனைகள் அபாரம்…
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கு பாஜக காரணம் அல்ல: தமிழிசை
எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் பழமொழியினை இனி ஆர்.கே நகர் தேர்தல் ரத்திற்கு பாஜக காரணம் இல்லை என மாற்றிகொள்ளலாம்
நாங்கள்தான் காரணம் என்பதை இப்படியா ஒப்புகொள்வீர்கள் அம்மணி?
3 ஆண்டு பதவிகாலத்தில் சாதித்தது என்ன? அமைச்சரவையின் அறிக்கை கேட்டார் மோடி
இந்த அறிக்கையினை சசிகலாவிடமும், தினகரனிடமும் கேட்டுபாருங்கள், அப்படி ஒரு பதில் கோபமும் கண்ணீருமாக பதில் கிடைக்கும்
2 ஆண்டு சாதனை எப்படியும் போகட்டும், 3ம் ஆண்டில் தமிழகத்தில் இந்த மத்திய அரசு நிகழ்த்தும் சாதனைகள் அபாரம், அப்படி ஒரு மகத்தான சாதனை
எங்களை யார் கேள்வி கேட்க யார் உண்டு? என்ற இறுமாப்பில் இருந்தவர்களை கலங்கடித்து விரட்டிகொண்டிருக்கும் அந்த சாதனை போதாதா?
இப்படி ஒரு மத்திய அரசு அமையவில்லை எனில் தமிழகம் இருமாதத்திற்கு முன்பே விற்பனைக்கு வந்திருக்கும்
ஆக இந்த பாஜக அரசு, தமிழகத்தை காத்து பெரும் சாதனை நிகழ்த்திகொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமே இல்லை..
பன்னீர் செல்வத்தையே துணிந்து எழ வைத்துவிட்டார்கள், பேச வைத்துவிட்டார்கள் என்றால் இந்த சாதனையின் மகத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்…
கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து: உழைப்பும், நேரமும் வீணாகி விட்டது – தமிழிசை
இதற்கு முன் இவரின் உழைப்பும், நேரமும் பலன் கொடுத்ததா என்ன?
வழக்கம் போல எங்கள் உழைப்பு வீணாய் போனது என சொன்னால்தான் என்ன?
ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யபட்டது சரியான முடிவல்ல : விஷால்
வர வர இந்த கொசுதொல்லை தாங்கமுடியவில்லை, யார் மருந்து தெளிக்க போகின்றார்களோ அவர்களுக்கு பொற்கிழி வழங்கபடும்.
இவருக்கு ஒருவித “தேர்தல் மேனியா” வியாதி போல, நிஜ தேர்தலையும் அவரின் “சங்க தேர்தல்” போலவே நினைத்து கொண்டிருக்கின்றார்..
ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் தரம் தாழ்ந்த பிரசாரத்தில் ஈடுபடுகிறார் ஸ்டாலின்: டி.டி.வி.தினகரன்
ஆதாரமா? தேர்தல் ஆணையத்திடம் நிரம்ப இருக்கின்றது, சென்று வாங்கி பார்த்துகொள்ளுங்கள்
செல்லும்பொழுது விஜயபாஸ்கர், சரத்குமார் என சிலரை அழைத்து சென்றால் சாட்சியுடன் கூடிய ஆதாரம் கிடைக்கும்….