மத தீவிரவாதிகள் அல்ல, சாத்தானின் குழந்தைகள்
அமர்நாத்தில் புனித யாத்திரை சென்ற பக்தர்களை அந்த கொடூர, மனிதநேயமற்ற, மதமற்ற தீவிரவாதிகள் அதாவது மதத்தின் அருமை தெரியாத மிருகங்கள், ஐஎஸ் போன்ற இஸ்லாம் என சொல்லி சாத்தானான பேய்கள் சுட்டுகொன்றிருக்கின்றார்கள்,
இவர்கள் மத தீவிரவாதிகள் அல்ல, சாத்தானின் குழந்தைகள்
பலர் காயமடைந்திருக்கின்றார்கள்
இது மிக வன்மையாக கண்டிக்கதக்கது மட்டுமல்ல, மிக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம்
அவர்களுக்கு மதமுமில்லை, மனிதமுமில்லை மிருகங்களை விட மகா கேவலமானவர்கள் இவர்கள், அழித்தொழிக்கபட வேண்டியவர்கள்
இஸ்ரேல் சென்ற பிரதமர் என்ன பெற்றுவந்தார் என நமக்கு தெரியாது, ஆனால் மிக சிறந்த தொழில்நுட்பத்தை அவர்களிடமிருந்து வாங்கியாவது இந்த கொடூரர்களின் அட்டகாசத்திற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்
7 இந்தியர்களை கொல்வதால் அவர்கள் நோக்கமோ, அவர்களின் திட்டமோ வெற்றி பெறாது
அந்த 7 பேருக்கும் அஞ்சலி செலுத்துவோம், இப்பயங்கரவாதிகளை உருவாக்கி, அவர்களுக்கு புகலிடம் கொடுத்து ஆதரிக்கும் அந்த பயங்கரவாத பாகிஸ்தானை கண்டிப்போம்
அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது