மனம் உருகி தாயினை பாசமுத்தமிடுகின்றார் ராகுல்

Image may contain: 1 person, standing and wedding

கிட்டதட்ட 23 ஆண்டுகாலம் கட்சியினை காப்பாற்றிவிட்டு , இன்று அதில் சிறு கீறலும் விழாமல் அதற்கொரு தலைவனையும் கொடுத்துவிட்டு செல்லும் பெருமித உணர்வு சோனியா முகத்தில் தெரிகின்றது

பெரும் கட்சிக்கு தலைவன் என்றாலும், தன் தாய் பொறுப்பிலிருந்து விலகும்பொழுது, அரசியலுக்கு முழுக்கு என சொல்லி செல்லும்பொழுது மனம் உருகி தாயினை பாசமுத்தமிடுகின்றார் ராகுல்

எவண்டா சொன்னது? இந்திராவும் சஞ்சயும் ராஜிவும் இல்லை என்றால் காங்கிரஸ் அழிந்துவிடும் என்றது?

அது ஆயிரம்காலத்து பயிர், எந்நாளும் ஆலமரமாய் நிலைத்திருக்கும்

அது மிக இக்கட்டான நிலையில் இருந்தபொழுது அத்தீபம் அணையாமல் காத்த அந்த சோனியாவின் கரங்கள் இப்பொழுது ஓய்வு பெறுகின்றன‌

பெரும் தீயாக காங்கிரஸ் எழுச்சி இனி ஏற்டபோகின்றது, அதற்கு அன்று அணையாமல் காத்த சோனியாவே காரணம்

ராகுல் வந்திருகின்றார் , எந்த ராகுல்?

பொற்கோவில் சம்பவத்தை தொடர்ந்து இந்திரா குடும்பத்தை வேரறுப்போம் என காலிஸ்தான் காலிகள் குரைத்தபொழுது ஓடி ஒடி இந்திரா காப்பாற்றினாரே அந்த ராகுல்

உமா மகேஸ்வரன் எனும் ஈழதீவிரவாதி ராஜிவுடன் ஏற்பட்ட மோதலில் ராஜிவின் குழந்தைகலை கடத்த திட்டமிட்டு முடியாமல் போனதே, அந்த ராகுல்

ராகுலும் ஆயிரம் ஆபத்துக்களை ஐந்து வயது முதலே கடந்துதான் வந்திருக்கின்றார், சிலது தெரியும் பல விஷயம் தெரியாது

இந்த புலிகள் செய்த கெட்டதிலும் ஒரு நல்லது என்ன?

ஆதிரை எனும் பெண்ணை டெல்லியில் ராஜிவினை கொல்ல மாற்று ஏற்பாடாக அனுப்பியிருந்தார்கள், குடும்பத்தோடு கொல்வதே திட்டம், ஆனால் சென்னையிலே சிவராசன் முந்திகொண்டதால் ராஜிவ் குடும்பம் தப்பியது

பின்னாளில் பிரபாகரனே வாரிசு இன்றி அழிந்தான்.

இப்படி எத்தனை ஆபத்துக்களை கடந்தாலும் இன்றும் பொதுமக்கள் அழுதால் ஓடி சென்று அவர்களை அணைத்து அழும் ஒரு மனம்தான் ராகுலுக்கு இருக்கின்றது

என்னனவோ சிந்தனைகள் வருகின்றன‌

தன் மாமியாரை பலிகொடுத்து, கணவனை இழந்து பெரும் போராட்டம் நடத்தி இந்நாட்டின் மாபெரும் கட்சியினை இன்று மகனிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகின்றார் சோனியா

அரியணை அவருக்கு அருகில் வந்தது, அவர் வெளிநாட்டுக்காரர் என தடுத்தனர் சிலர்

இனி அவர் மகனுக்கு முடிசூடுவதை அவர் அருகிலிருந்து பார்க்கத்தான் போகின்றார். தடுப்பவர் எவருண்டு?

ராகுல் முத்தமிட்டு நன்றி சொன்னார், அககட்சியின் உண்மை தொண்டர்கள் தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து சத்தமிட்டு நன்றி சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.

தியாக தீபமே ஓய்விலிருந்தும் கட்சியினை வழிநடத்துங்கள். இத்தேசம் என்றுமே உங்கள் நலனுக்காக பிரார்த்திக்கின்றது.