மனிதனின் விண்கலம் பூமியினை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல

Image may contain: cloud and sky

உலக வல்லரசு ஆக வேண்டுமென்றால் தரையில் மட்டும் ஆக்கிரமிப்புகளை செய்தால் போதாது, விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்

இதனை முதலில் தொடங்கி வைத்தது சோவியத் ரஷ்யா, அவர்கள் விண்வெளி அறிவு பெற்றால் நிச்சயம் அமெரிக்காவினை நொறுக்குவர் என உணர்ந்த கென்னடி அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட முழு ஒத்துழைப்பு வழங்கினார்

அன்று ரஷ்யாவின் வளர்ச்சி அமெரிக்காவினை நொறுக்கும் அளவில் இருந்தது, அன்றே ஸ்டார் வார் எனப்படும் விண்வெளி யுத்ததிற்கு ரஷ்யா தயாராக இருந்தது

கென்னடி கொஞ்சமும் சளைக்காமல் சவால் விட்டு அமெரிக்க விண்வெளி துறையினை ஊக்கபடுத்தினார்.

ஆனால் அவர் இறந்தபின்பே அமெரிக்கர் நிலவுக்கு சென்றனர் எனினும் கென்னெடியின் கனவு பெரிது

இன்றுவரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது இந்த இரு நாடுகளுமே

இப்படி இவர்கள் இருவரும் ஆளும் விண்வெளிக்கு நாங்களும் பட்டா போட வருவோம் என கிளம்பிய சீனா டியாங்டெங் எனும் செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது

அது செயற்கைகோள் என்றாலும் சோதனை முயற்சி, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியின் முதல்படி

அப்படி 2011ல் அனுப்பபட்ட அந்த கலம் ஒழுங்காக வேலை செய்தால் இந்நேரம் மனிதனை அனுப்பி இருக்கும் சீனா

ஆனால் அவர்களுக்கு எல்லாம் காப்பி அடிக்க தெரியுமே தவிர உருப்படியாக செய்ய தெரியாது என்பதால் இந்த கலம் போக்கு காட்டியது

மத்திய அரசு பழனிச்சாமியினை வைத்திருப்பது போல முதலில் ஒழுங்காக சமத்தாக இருந்த கலம் பின்பு வைகோ , நாஞ்சில் சம்பத் அளவிற்கு சென்றுவிட்டது

அதன்பின் அதனை கட்டுபடுத்த தெரியா சீனர்கள் இனி இது பூமியில் விழும் என சொல்லிவிட்டு அமைதி காத்தார்கள்

மனிதனின் விண்கலம் பூமியினை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல, முன்பு அமெரிக்காவின் ஸ்கை லேப் என்பது இப்படி நாஞ்சில் சம்பத் நிலமைக்கு சென்று, பின் உலகை பயமுறுத்தி இறுதியில் கடலில் விழுந்தது

அதே காரியத்தை இந்த டியாங்டெங்கும் செய்கின்றது

ஞாயிறு காலை அது பூமியில் விழுமாம், நிச்சயம் தீபிடித்து எரியும் ஆனாலும் 9 டன் எடையுள்ள கலம் என்பதால் முழுக்க எரியாமல் சில பாகங்கள் பூமியில் விழுமாம்

அது விழும் இடத்தை கணித்தால் லண்டன் , மும்பாய், பாரிஸ் , ரோம், பாங்காங்க், என சீனாவின் பீஜிங்கும் வருகின்றது

இன்னொரு வாய்பினை கணித்தால் தென் அமெரிக்கா, தெற்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என வருகின்றன‌

இதனால் இந்த ஏரியாக்கள் கொஞ்சம் பதற்றத்தில் இருக்கின்றன‌

தமிழகத்திற்கு இந்த ஆபத்து இல்லை, காரணம் இது முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த புண்ணிய பூமி

குஷ்பு வாழும் அதிர்ஷ்ட பூமி, அதனால் இங்கு ஒரு ஆபத்தும் வராது