மனுநீதி!

எதற்கெடுத்தாலும் மனுநீதி தெரியுமா என்றொரு கோஷ்டி கிளம்புகின்றது, மனுநீதிய்ய்ய்ய் என கண்கள் சிவக்க கத்துபவன் எவனாவது அந்த நூலை பார்த்திருக்கின்றானா? படித்திருக்கின்றானா என்றால் இல்லை

அப்படியே கிடைத்தாலும் அதை வாசித்து அர்த்தம் தெரிய சமஸ்கிருதம் தெரியுமா என்றால் அதுவுமில்லை

ஆனால் ஓப்பாரி மட்டும் வரும், இதன் பெயர் பகுத்தறிவு

ஸ்ம்ருதி என்றால் சட்டங்களின் தொகுப்பு என பொருள், ஒவ்வொரு காலத்துக்கும் அல்லது ஒவ்வொரு பகுதிக்கும் சில சட்டங்கள் இருந்திருக்கின்றன‌

மனு என்பவர் கொடுத்த ஸ்ம்ருதி மட்டுமல்ல, நாராயண ஸ்ம்ருதி , யாக்யவல்க்ய ஸ்ம்ருதி,நாரக ஸ்ம்ருதி, காத்யாக ஸ்ம்ருதி ஏன ஏகபட்ட ஸ்ம்ருதிகள் உண்டு

மனு ஸ்ம்ருதி என்பது பழமையானது, காலம் மாற மாற ஸ்ம்ருதிகளும் மாறிகொண்டே இருந்தன‌

அக்காலங்கள் பிரமீடுகள் காலத்தை விட பழமையானவை அதாவது 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை

கடைசி ஸ்ம்ருதி கூட புத்தனுக்கு முற்பட்ட 500 ஆண்டுகளில் இருந்திருக்கின்றது

மனு ஸ்ம்ருதியில் கூட பிராமணன் தவறு செய்தால் சாமான்யனை விட கடுமையாக‌ எப்படி தண்டிக்கபட வேண்டும் என்பது முதல் பெண்களுக்கான சொத்துரிமை வழக்கு என பல விஷயங்கள் உள்ளன‌

இந்த பகுத்தறிவு கோஷ்டி சொல்லும் “சூத்திரனுக்கு ஈயத்தை காய்ச்சி ஊற்று” என்பதெல்லாம் தவறான மொழிபெயர்ப்பில் வந்ததே அன்றி வேறல்ல‌

மனு நீதி நூலின் சமஸ்கிருத பிரதியினை கண்ணாலும் பார்த்திருக்க மாட்டான், சமஸ்கிருதுக்கு ஸ்பெல்லிங்க் கூட தெரிந்திருக்காது, அவனெல்லாம் மனுநீதிடோவ்வ்வ் என கத்துவது காலக்கொடுமையான பரிதாபம்.