மனுஷ்யபுத்திரன் யார்? அவர் என்ன திமுகவில் மிக பெரும் தலைவரா?
இந்த நபர் யாரென தெரியவில்லை, ஆனால் ஏதோ ஒருவித குழப்பத்தில் எதையாவது சொல்லியாக வேண்டிய அவசரத்தில் ஆசிட்டை குடித்துவிட்டு எழுதியிருப்பது தெரிகின்றது
விகடனை விமர்சித்தால் 200 ரூபாய் பதிவராம், நாட்டுபற்று கொஞ்சமின்றி பணத்திற்காய் எழுதும் பாம்பு கூட்டம் இப்படி சொல்வதில் ஆச்சரியமில்லை
அன்னார் என்ன சொல்கின்றார் என்றால் விகடனுக்கும் திமுகவிற்கும் நல்ல புரிதல் உண்டாம். தயாநிதி மாறன் விகடனை ஆதரிப்பாராம் , இந்த மனுஷ்ய புத்திரன் என்பவர் ஆனந்தவிகடனில் உள்ளவர்களுக்கு விருது கொடுப்பாராம், விகடனும் அவருக்கு உதவுமாம்
இது என்ன கொடுமை?
தயாநிதிமாறனே திமுகவினை விட்டு ஒதுக்கபட்டிருக்கின்றார், அவரை எங்காவது யாராவது சமீபத்தில் பார்த்ததுண்டா? எதும் கட்சி கூட்டத்தில் கண்டதுண்டா
மாறன் மகன் என்ற காரணத்திற்காக கலைஞர் செய்த உதவிகளை எல்லாம் அவரின் பலவீனமாக கருதி, கலைஞர் சாட்டையினை சுழற்றியபின் ஒடிவிட்ட நபர் தயாநிதி மாறன்
அடுத்து இந்த மனுஷ்யபுத்திரன் என்பவர் ஏதோ பெரியார் கைபிடித்து நடந்தவர் போலும், அண்ணாவோடு மேடையில் முழங்கியவர் போலும், கலைஞரை பல இடங்களில் வழிநடத்திய பெரும் அரசியல் ஞானிபோலவும் இவர் பேசிகொண்டிருக்கின்றார்
மனுஷ்யபுத்திரன் யார்? அவர் என்ன திமுகவில் மிக பெரும் தலைவரா? அவர் வழங்கும் விருது என்ன ஞானபீடா விருதா?
ஏதோ பேசிகொண்டிருக்கின்றார் மனிதர்
அடுத்து சொன்னார் பாருங்கள், சீமானையும் திருமுருகனையும் பற்றி விகடன் எழுதினால் யாருக்கெல்லாம் கசக்குமோ அவர்களை பார்த்து இவர் சிரிப்பாராம்
சீமானுக்கும் எமக்கும் வாய்க்கால் தகறாறா? திருமுருகனுக்கும் எமக்கும் என்ன வரப்பு மோதலா?
அவர்கள் அந்நியநாட்டு தீவிரவாதியின் கொடியினை பிடித்த்து கொண்டு, இந்நாடு ஈழமக்களுக்கு செய்த உதவிகளை மறைத்து, அந்த பாசிச புலிகளின் பெரும் குற்றங்களை மறைத்து இல்லா பழிகளை இந்நாட்டின் மீது சுமத்தி பேசிகொண்டிருந்தால் நாட்டுபற்றுள்ளோர் விடுவாரா?
புலிகளால் 1500 இந்திய அமைதிபடை வீரர்களின் பிணம் வந்து சேர்ந்த இடம் தமிழகம், ராஜிவ் உட்பட 17 பேர் இறந்த இடம் இந்த தமிழகம். இங்கு இருந்து பிரபாகரனுக்கு கொடிபிடித்தால் நாட்டுபற்றுள்ள யாருக்கு கோபம் வராது?
இந்த நபரை போல தேசதுரோகிக்கு, கொஞ்சமும் நாடு எனும் அக்கறை இல்லாதவருக்கு இனிக்கும், எம்மை போன்றோருக்கு கசக்கத்தான் செய்யும்
சீமானையும் திருமுருகனையும் ஆதரித்து எழுதினால் அந்த விகடன் நிச்சயம் தேசதுரோக பத்திரிகை, அதை ஆதரிக்க்கும் இவரை போன்றவர்கள் பெரும் தேசதுரோகிகள்
இத்தேசத்தின் துரோகிகள் யாராயினும் இந்தியகுடிமகனாக அவர்களை எதிர்த்துகொண்டே இருப்போம், அதை தவிர இந்தியனுக்கு என்ன பொறுப்பு இருக்கின்றது.
ஆனாலும் இந்த நபரை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகின்றது, மனுஷ்யபுத்திரன் எல்லாம் திமுக மேலிடம் என இவரை நம்ப வைத்த சக்தி எது?
ஒருவேளை அப்படி சொல்லித்தான் மனுஷ் இவரை நம்ப வைத்திருக்கின்றாரோ என்னமோ?
திமுக தலமை இந்த மனுஷ்யபுத்திரன் என்பவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, அந்த நபர் ஆங்காங்கு நானே குட்டி செயல்தலைவர் என சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கின்றது