மனுஷ்யபுத்திரன் ஸ்டைல்
தனக்கு கொஞ்சமும் தெரியாத அல்லது புரியாத விஷயம் என்றாலும் தலையினை சிலுப்பிகொண்டு சென்று கருத்து சொல்வது மனுஷ்யபுத்திரன் ஸ்டைல்
அப்படி இப்பொழுது காலா விவகாரத்தில் ராவணன் திராவிடன் என கிளம்பிவிட்டார்
மனிதருக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை, இவரை டிவி விவாதத்திற்கு அழைத்தவனை பரிதாபமாக நோக்க வேண்டி இருக்கின்றது
ராம கதையின் மூலம் வால்மிகி, அவனிடமிருந்தே எல்லோரும் காப்பி அடித்தார்கள், அதற்கு கலாச்சாரத்திற்கு தக்கபடி மாற்றிகொண்டார்கள், அதில் கம்பன் குறிப்பிட தக்கவன்
வால்மிகி ராமயணபடி ராமன் சத்ரியன் கருப்பன், ராவணனே பிராமணன் சிவபக்தன் நல்ல நிறமானவன்
வால்மிகி ராமாயணத்தில் இலங்கை என தெளிவாக சொல்லபடவே இல்லை, ஒரு நாடு என்றுதான் குறிப்பிட்டான், பின்னர் ஆளாளுக்கு இழுத்து இலங்கை என முடிச்சு போட்டுவிட்டார்கள்
கடல் கொண்ட குமரிகண்டமும் அக்காலம் இருந்திருக்கலாம், அதில் ஒரு பகுதி ராவண பூமியாக இருந்திருக்கலாம் என்பது யூகம், எதற்கும் பெரும் ஆதாரமில்லை
ஆனால் ராமன் ராவண சண்டை நடந்ததும், பெண் ஆசையால் அவன் அழிந்தான் என்பதும் வரலாறு
இத்தேசத்தின் மிகபெரும் இதிகாசம் அது மேற்காசியா முதல் ஜப்பான் வரை அக்கதை இருந்தது, தொன்றுதொட்டு வந்தது
மேற்கே நபிபெருமானின் எழுச்சிக்கு பின் அது இல்லை என்றாலும் புத்தனின் எழுச்சிக்கு பின் இன்னும் கிழக்காசியாவில் பிரமாதமக வாழ்கின்றது
நடக்காத ஒரு சம்பவம் இத்தனை ஆண்டு காலம் காக்கபட்டு வருவது சாத்தியமே இல்லை
தமிழில் பல ராமாயணம் உண்டு என்றாலும் கம்பன் தன் அழகு தமிழால் அழியா இடம் பெற்றான், ஆனால் தமிழ் கலாச்சாரபடி சில இடங்களில் மாற்றியும் இருந்தான்
எங்கேயும் ராவணன் தமிழன் என்றோ, அவன் திராவிட அடையாளம் என்றோ இதிகாசத்திலுமில்லை, தமிழ் புராணங்களிலுமில்லை
அவன் பெயரும் அவனின் மனைவி மற்றும் சகோதரர் பெயரையும் கவனியுங்கள் அவை தமிழ்பெயரே அல்ல
இந்த ராவணன் திராவிடன் எனும் கட்டுகதை எல்லாம் 1900களுக்கு பின் வந்தது, அது ஆரிய கட்டுகதை என்றார்கள் தமிழனுக்கு ராமன் கடவுளில்லை என்றார்கள்
ஆனால் தமிழனாய் பிறக்காத இயேசுவும், நபிபெருமானும் இங்கு கொண்டாடபட்ட்பொழுது கள்ள மவுனம் காத்தார்கள்
ராவணன் திராவிடன், தமிழன் என்பதெல்லாம் கட்டுகதை ஆதாரம் இல்லா செய்திகள்
வால்மிகியோ இன்னும் பலரும் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை, ராவணனின் வாழ்வினையும் அவன் பக்தி , வரம் இன்னபிற விஷயங்களை நோக்கினால் அவன் சுத்த பிராமணனாகவே இருந்திருக்கின்றான்
பிராமணர் வந்தேறி ஆனால் பிராமண ராவணன் தமிழர் அடையாளம், திராவிட தலைவன் என்பதெல்லாம் பெரும் புரட்டு
மனுஷ் என்பவருக்கு சில உளறல்களை தவிர ஒரு மண்ணும் புரியாது, ரஞ்சித் போன்றே ஒரு அரைகுறை
இந்த மங்குஸ் மண்டையனை அழைத்து பெரும் பைத்தியக்கார விவாதங்களை நடத்தும் டிவிக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்…
எத்தனையோ யுகங்களாக வரும் மத நம்பிக்கையினை புற்றீசல் போல அற்ப ஆயுள் கொண்ட நாத்திக திராவிட வாதம் தீடீரென ராவணன் தமிழன் திராவிடன் என குழப்பியதால் ஒரு சேதாரமும் வராது
அக்குழப்பம் உண்மையும் ஆகாது
ராமகாதை என்பது இங்குள்ள பெரும் நம்பிக்கை, இந்திய அடிப்படை ஆதாரம்
அதன் வேரின் ஆழம் பெரிது, மலை போன்ற விஷயம் அது அதன் முன்னால் இந்த அற்ப திராவிட புரட்டுக்கள் எல்லாம் புல் போன்றது
அந்த புல்லை பிடித்து தொங்கிகொண்டு இதுதான் வாதம் என சொல்லிகொண்டிருக்கும் மனுஷை அப்பக்கம் விடாமல் இருப்பது அந்த டிவிக்கு நல்லது