மனுஷ்ய புத்திரனின் கப்சா….

காமராஜர் காலத்தில் அரிசி பஞ்சம் நிலவியது, காமராஜர் அரிசி குறைத்தார், அதனை எதிர்த்து திமுக போராடியது எனும் கப்சாவினை யார் கிளப்பிவிட்டார் என்றால்,

மனுஷ்ய புத்திரனாக இருந்திருக்கின்றார்

அடேய், 1950களில் இந்த உலகம் பட்ட பாட்டினையும், ஒவ்வொருநாடும் நெல்முளைக்காதா, கோதுமை முளைக்காதா? என பரிததவித்த தவிப்பினையும் மறைத்துவிட்டு,

என்னவோ தமிழகத்தில் மட்டும் அரிசி இல்லாதது போலவும், காமராஜர்தான் எல்லா அரிசி வயல்களையும் அழித்தது போலவும் சொல்லியிருக்கின்றார்

கல்லணையினை கட்டியது திமுக என்பதை மட்டும் அன்னார் சொல்லவில்லை

200 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வி நெல்லையில் பெண்களுக்கு தொடங்கபட்டது, திராவிட எழுச்சிக்கு முன்பே முத்துலெட்சுமி ரெட்டி போன்ற மருத்துவர்கள், இன்னும் படித்த பெண்கள் இருந்தார்கள்

பெண்கல்விக்கு சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலே வழி இருந்தது

அதனை எல்லாம் மறைத்து பெண்களுக்கு கல்வி கொடுத்தது திமுக என அவர் சொல்லியிருகின்றார்

ஏன் திமுகவில் பெண்களுக்கு 33% கொடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம் மனுஷ்?

ஆக திமுகவினை வெட்டுவதற்கு அதன் கழுத்தினை பிடித்து எதிராளிக்கு கொடுப்பது யார்? என்ன தேடிகொண்டிருந்தால் அது மனுஷில் முடிகின்றது

இந்த மனுஷ் போன்ற திடீர் திராவிடர்களை பேசவிட்டால் இப்படி மகா அபத்தமாகத்தான் முடியும்

அண்ணா காலத்தில் பெரும் சிந்தனையாளர் படை இருந்தது, கலைஞர் இருப்பவர்களில் சிலரை வைத்து சமாளித்தார்

பாவம் ஸ்டாலின் அவருக்கு மனுஷ் தான் கிடைத்திருக்கின்றார்

திமுகவின் எதிரி ஸ்டாலின் பக்கத்திலே இருப்பதுதான் பெரும் கொடுமை

இந்த மனுஷை விட்டால் ஆளில்லை எனும் அளவிற்கு, ஒரு உருப்படியான திராவிட கட்டுரை கூட எழுதமுடியாத அளவிற்கு அது எழுத்து துறையில் வீழ்ச்சி கண்டிருக்கின்றது

பெரும் பரிதாபம் இது

மனுஷை எல்லாம் ஒரு திமுக கருத்துசொல்பவராக வைத்துவிட்டபின் அக்கட்சியினை பரிதாப கண்ணீரோடுதான் பார்க்கவேண்டி இருக்கின்றது

அவர் கவிதையினை படித்தாலே ஏன் தமிழ்படித்தோம் என்ற வெறுப்பு வரும், இதில் அவர் கட்சிக்கு கட்டுரை எழுதினால் எப்படி இருக்கும்?

இப்படி பெரும் ஓட்டைகளும், அபத்தமுமாகத்தான் இருக்கும்..

தத்திகள் எல்லாம் எழுதிபழகும் இடமாக திமுக மாறிவிட்டது…