மனுஷ் அல்ல மாரிதாஸ் சென்றாலும் அவர்கள் வரவேற்று பேசுவார்கள்
பியுஷ் மனுஷ் திமுக அலுவலகம் போய் இருந்தா உயிரோட வந்து இருப்பாரா என பல கேள்விகள்
திமுக பற்றி நன்கு அறிந்ததால் சொல்கின்றோம், மனுஷ் அல்ல மாரிதாஸ் சென்றாலும் அவர்கள் வரவேற்று பேசுவார்கள்
பழைய தலமை என்றால் அவரை சந்தித்த கொஞ்ச நேரத்தில் மாரிதாஸ் அறிவாலத்து கழக கண்மணிகளில் ஒருவராகியிருப்பார்
ஆம் கலைஞரை சந்தித்தால் கண்ணீரோடு கதறி இனி நான் திமுக உடன்பிறப்பு என உருகியிருப்பார் மாரிதாஸ், அப்படி ஆக்கிவிடுவார் கருணாநிதி
தன்னை மிக கடுமையாக எதிர்த்த சோ ராமசாமி முதல் ஜெயகாந்தன் வரை தயக்கமின்றி சந்தித்த அறிவாலயம் அது
அந்த அளவுக்கு பேசியே உருக்கி வார்த்து வடித்துவிடுவார்கள்
இப்போதுள்ள தலமை அவர் அளவுக்கு உருக்காது எனினும் சந்திக்க தயங்காது
முறையாக அனுமதி கேட்டால் அறிவாலயம் இப்பொழுதும் கொடுக்கத்தான் செய்யும் , மனுஷ் போகலாம் சந்திக்கலாம் வரலாம்
ஆனால் திடீரென புகுந்து நான் சமூக ஆர்வலர் என அழிச்சாட்டியம் செய்தால் அறிவாலயம் அல்ல, அன்ன சத்திரத்திலும் அடிக்கத்தான் செய்வார்கள்