மனுஷ் சொன்னது சொந்த கருத்தாம்
மனுஷ் சொன்னது சொந்த கருத்தாம், அவர் எழுத்தாளராம் அதனால் அவர் கருத்தை , கருதுரிமைக்கு எதிரான கலவரமாக பார்க்க வேண்டுமாம்
தலைவி குஷ்பு பாலியல் கல்வி பற்றி சொல்லும்பொழுது பொங்கிய ஒரு பயலையும் இப்பொழுது காணவில்லை
அவர் ஏதும் சொன்னால் அவர் மேல் கோர்ட் இருக்கும் இடமெல்லாம் வழக்காம், சர்ச்சையாம், வீட்டில் கல்லெறிவார்களாம்
ஆனால் மனுஷ் சொல்லிவிட்டால் மட்டும் கருத்து உரிமையாம், யாரும் பேச கூடாதாம், இது எழுத்தாளர் சமூகம்
அதையே திமுகவிலும் சிலது பாடுகின்றது
தலைவி குஷ்பு கூட திமுக அடுத்த தலைவர் பற்றித்தான் கருத்தை சொன்னார், அவரை ஏன் கல்லேறிந்து கட்சியினை விட்டு அனுப்பினார்கள்?
தலைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு கருத்துரிமை பற்றி பேச வரட்டும் இந்த கிராதகர்கள்.