மய்யம் மண்ணாங்கட்டி ….
கலைஞரிடம் ஒருமுறை கேட்டார்கள், சிலம்பு + அதிகாரம் = சிலம்பதிகாரம் என்றுதானே வரவேண்டும், எப்படி சிலப்பதிகாரம் ஆகும் என கேட்டு மடக்கபார்த்தார்கள்
கலைஞர் நொடியும் யோசிக்கவில்லை, சில இலக்கண விதிகளை சொல்லிவிட்டு வேம்பு + மரம் = வேம்ப மரமா? வேப்ப மரமா? என கேட்டார்
வேப்பமரம் என்றார்கள், சிலப்பதிகாரமும் அப்படித்தான் என சொன்னபின் யாரும் கேள்வி கேட்கவில்லை
அப்படிபட்ட தமிழ்தலைவர்கள் வாழும் மாநிலத்த்தில் மய்யம் மண்ணாங்கட்டி என சில தலைவர்கள் திரிவதுதான் கொடுமை, அந்த மய்யத்திற்கு புரியாத விளக்கமே வேறு.