மரண அரசியல்…
ஜெயா சாவு விசாரணை எனும் சர்ச்சையினை கிளப்பிவிட்டதில் நீட்டும் மறைந்தது, அனிதாவும் மறைந்தாள், டெங்கும் மறைந்தது இன்னும் என்னவெல்லாமோ மறைந்தன
ஆக செத்தும் கெடுக்கின்றார் ஜெயலலிதா..
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இதுவேதான்.
ஜெ., மரணம்: 3 மாதத்தில் விசாரணை அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவு!
பாஸ்தீனம் மீதான படுகொலைகளை இஸ்ரேலே விசாரிக்கும் , முள்ளிவாய்க்கால் சர்ச்சைகளை சிங்கள அரசே விசாரிக்கும் என்பது போன்ற வரிசையில்
ஜெயலலிதா மரணத்தை தமிழக அரசே விசாரிக்கும் எனபதும் ஒன்று.
அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தார் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
ராஜிவ் கொலையினையொட்டி திமுக தடை செய்யபடும் அளவிற்கு சென்றதும் , எப்படியோ தப்பி பிழைத்ததும் வரலாறு.
திமுகவின் மறுபிறப்பு அது. அன்று திமுக சுமந்த பழியும் , அந்த கலவரத்தில் திமுகவினரின் சொத்துக்கள் கொழுத்தபட்டதெல்லாம் கண்ணீர் நினைவுகள்.
ராஜிவ் கொலைநடந்த காலங்களில் திமுக நெருப்பாற்றினை கடந்துகொண்டிருந்தது.
அப்பொழுது ஒன்றுமே தெரியாத கன்னிபோல சென்னையில் சுற்றிகொண்டிருந்தவர் அந்த பேரரிவாளன்.
வாக்கு அரசியலுக்காக எவ்வளவு தரம் இழந்துவிட்டார் ஸ்டாலின்?
அப்படியே இனி பாஜகவினை மகிழ்விக்க அவர் கோட்சே குடும்பத்தையும் சந்திக்கும் வாய்ப்பு நெருங்கிகொண்டிருக்கின்றது.