மராட்டிய மாநிலத்தில் பெரும் சர்ச்சை

மராட்டிய மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஓடிகொண்டிருக்கின்றது

அங்கு பின் தங்கிய சமூகத்து மாணவி தாயல் பாட்வி விவகாரம் அது. அந்த மாணவி படிப்பில் சுட்டி என்பதாலும் இட ஒதுக்கீட்டு முறையாலும் மருத்துவ கல்லூரியில் நுழைந்திருக்கின்றாள்

ஆனால் உயர்சாதி மாணவர்கள் அவளை சாதி ரீதியாக படாதபாடு படுத்தியிருகின்றார்கள்

லட்சியத்தில் மிக உறுதியாக நின்ற அவள் முடிந்தவரை சமாளித்திருக்கின்றாள். ஆனால் ஒரு கட்டத்தில் அச்சீண்டல்களும் அவமானமும் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலை செய்து கொண்டாள்

ஏழை பிற்படுத்தபட்ட மாணவி ஒருத்தி மருத்துவ கனவோடு கல்லூரியில் கால்வைத்து சாதிகொடுமையால் பிணமாக திரும்பியிருக்கின்றாள்

இந்நாடு சாதிகொடுமையால் ஒரு மருத்துவரை இழந்துவிட்டது என்பது நினைக்கவே முடியாத கொடூரம்..

இவ்வளவுக்கும் அம்பேத்கர் பிறந்த மண் அது

சில நேரங்களில் அந்த பெரியாரையும் நினைக்கத்தான் வேண்டியிருக்கின்றது.