மராட்டிய விவசாயிகள் போராட்டம் முழுவெற்றி
மராட்டிய விவசாயிகள் போராட்டம் முழுவெற்றி பெற்றிருக்கின்றது, மும்பையில் அவர்கள் பேரணி நுழைந்தபொழுது மக்கள் பேராதரவு கொடுத்து வரவேற்றிருக்கின்றார்கள்
அரசு பணிந்து அவர்களின் விவசாயகடன் , மின்சார கட்டணம் எல்லாம் ரத்து செய்திருக்கின்றது
தமிழகத்தில் ஏன் விவசாயி பெரிதும் பொங்கவில்லை என்பதன் காரணம் மின் கட்டணம் இலவசம் என்பது.
கலைஞர் செய்துவைத்த அட்டகாசமான திட்டம் அது. உண்மையில் விவசாயிகளுக்கு அது மிகபெரும் வரபிரசாதம்
இன்றைய விவசாயி யாரும் அன்று சங்ககாலம் போல ஆறு குளத்து பாசானம் செய்யவில்லை, செய்தாலும் இருமாதமே
மற்ற நாட்கள் எல்லாம் கிணற்றுபாசனமே, கிணறும் ஊறுவதில்லை மாறாக ஆழ்துளை கிணறு அமைத்து அதில் 24 மணி நேரமும் ஊறும் நீரெடுத்து , கிணற்றில் விட்டு அந்த நீரை மறுபடி மின்மோட்டார் மூலம் பாசனம் செய்ய வேண்டும்
மின்சார கட்டணம் என ஒன்று விவசாயிக்கு இருந்திருந்தால் அன்றே ஏராளமான தற்கொலை முதல் இன்று விவசாயி இல்லா நிலை வந்திருக்கும்

கலைஞர் பின்பு தன் ஆட்சி காலத்தில் விவசாய கடனையும் தள்ளுபடி செய்தார் , உழவர் சந்தையினையும் அமைத்தார்
அதன் பினால் வந்த அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் இருக்குமே தவிர இலவச மின்சாரத்தில் கை வைக்காது
வைத்தால் ஷாக் அடித்து எரித்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியாததல்ல
மராட்டிய விவசாயிகள் மின்சார கட்டணத்தை ரத்து செய் என காலில் புண்வர நடக்கும்பொழுது, இதனை என்றோ ஊகித்து இலவசமின்சாரம் வழங்கிய கலைஞரின் தொலைநோக்கு கண்ணில் வந்து போகின்றது
ஒவ்வொரு தமிழக விவசாயியும் அவரை நன்றியோடு நோக்க வேண்டிய தருணமிது
கலைஞர் எவ்வளவோ விவசாயிகளுக்கு செய்துவிட்டு இன்று ஓய்ந்திருக்கின்றார். இந்த அதிமுக அரசு என்ன செய்தது?
மராட்டிய விவசாயிகள் பொங்குவதை போல தமிழக விவசாயிகள் பொங்கவில்லை. ஏன் என்றால் அப்படித்தான்
முன்பு முல்லைபெரியாரை மீட்ட பெருந்தேவியே என லட்சகணக்கான திடீர் விவசாயிகள் திரண்டனர். அவர்களை எல்லாம் காணவில்லை
உண்மையில் இப்பொழுது அஞ்சவேண்டியது பழனிச்சாமி, ஆம் மராட்டியம் போல் இங்கு திரண்டுவிட்டால் என்ன செய்வது என்ற பெரும் பயம் அவருக்கு வந்திருக்க வேண்டும்
ஆனால் விவசாயிகளை திரட்டவேண்டிய, உங்களுக்கு இலவச மின்சாரம் முதல் பல விஷயங்களை செய்த நாங்கள் கடனை ரத்து செய்ய உங்களுடன் போராடுவோம் என களமிறங்க வேண்டிய திமுக தூங்குகின்றது
ராமதாஸ் ஏதோ பேசிகொண்டிருக்கின்றார்
இதனை தவிர எல்லோரும் மகா அமைதி
டெல்லியில் பொங்கிய அய்யாகண்ணு இந்நேரம் சென்னையில் முழங்குவார் என நினைத்தால் அவர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பெண் … வா? இல்லையா? என்ற ஆராய்ச்சியில் சிக்கி அடிவாங்கி கொண்டிருக்கின்றார்
இனி போராடவேண்டும் என்றாலும் டெல்லிக்குத்தான் செல்வார்
ஆக தமிழக விவசாயிகளுக்கு கலைஞர் புண்ணியத்தில் மின்சார கட்டணம் இல்லை, ஆனால் கடன்சுமை இருக்கின்றது
இதனிலிருந்து அவர்களை மீட்க ஒரு கட்சிக்கும் ஆசை இல்லை. இதனை செய்ய வேண்டிய கடமையுள்ள திமுகவில் இருந்து சத்தமே இல்லை
அவர்கள் என்ன? யாருக்குமே தமிழக விவசாயிகளின் கடன்சுமை ரத்துசெய்ய குரல்கொடுக்க விருப்பமில்லை
ஏன்?
இங்கு பழனிச்சாமி அரசு மட்டும் கள்ளத்தனம் செய்யவில்லை, அந்த கள்ளத்தனத்தை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் எல்லா கட்சிகளும் குறிப்பாக திமுகவும் விவசாயிகளுக்கு பெரும் துரோகமே செய்கின்றன
பழனிச்சாமி அரசின் விவசாயி விரோத போக்கில் எல்லா கட்சிக்கும் இப்பொழுது பங்கு இருக்கின்றது.
எனிமும் மராட்டிய விவசாயி மின்கட்டணத்தை ரத்து செய் என கதறும்பொழுது, 30 வருடம் முன்னமே அதனை சிந்தித்து இன்று தமிழகத்தில் விவசாயி ஓரளவு தாக்குபிடிக்க காரணமான அந்த கலைஞர் இருக்கும் திசைபார்த்து நல்ல தமிழ் விவசாயி நன்றியோடு வணங்குகின்றான்