மராத்தா போராட்டம்

Image may contain: one or more people, crowd and outdoor

மராத்தா என்பது மகராஷ்டிரத்தின் குறிப்பிட்ட சாதி கிட்டதட்ட 30% அகள் அம்மாநிலத்தில் வசிக்கின்றார்கள்

சக்கதவர்த்தி வீர சிவாஜி முதல், அன்னா ஹசாரே வரை பெரும் பிம்மபங்களை கொடுத்த சாதி அது. மராட்டியம் என்பது எங்கள் பூமி என சொல்லி கொள்வார்கள்

அவர்களிலும் எம்.எல்.ஏக்கள் எல்லாம் உண்டு, முன்னாள் முதல்வர்களே உண்டு எனினும் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டுமாம்

கிட்டதட்ட 1980களில் தமிழகத்து ராமதாஸ் வன்னியர் சங்கம் மூலம் முன்னெடுத்த போராட்டத்தின் சாயல் இது, தமிழகம் தான் எத்தனை போரட்டங்களுக்கு வழிகாட்டி இருக்கின்றது

இந்த மராத்தா கிராண்டி மோர்ச்சா எனும் பேரணியும் போராட்டமும் 2016லே தொடங்கின, ஒரு மராத்தா சிறுமியினை மற்ற இனத்தார் மானபங்கபடுத்திய வகையில் “ஏய் மானமுள்ள மராத்தா இனமே, எங்கே உன் சரித்திர வீரம்?” என சிலர் அழைக்க மொத்தமாய் திரண்டார்கள்

அது சிறிய பேரணியாக கிளம்பி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி இப்பொழுது வெடிக்கின்றது

இது இருவருட போராட்டங்களின் தொடர்ச்சி இப்பொழுது பகிரங்கமாக போராடுகின்றார்கள்

இதில் முஸ்லீம்களுக்கும் மராத்தா இனத்திற்கும் சில உரசல்கள் உண்டு என்பதால் விஷயம் கொஞ்சம் கவனமாகவே நோக்கபடுகின்றது

3 பேர் இறந்திருக்கின்றார்கள், வன்முறை வெடிக்கின்றது இந்த போராட்டத்தின் தலமை குழு இதனால் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தாலும் மக்கள் அடங்குவதாக தெரியவில்லை

விரைவில் தேர்தல் நடக்க போகும் மாநிலம் என்பதால் ஏகபட்ட அரசியல் கணக்குகள், பாஜகவிற்கும் சிவசேனைக்கும் பிணக்கு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் பாஜகவின் கணக்கும் இதில் உண்டு

மராட்டியத்தின் ஆண்ட பரம்பரையான மராத்தா போராட்டம் நல்லபடியாக ஓய்ந்து அங்கு அமைதி திரும்பட்டும்


ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

சாதி கூட்டத்தை கூட்டி பொது சொத்துக்களை சேதபடுத்தி சமூக அமைதியினை கெடுக்கும் இவரை போன்றவர்களுக்கு 2 ஆண்டு போதாது, 20 ஆண்டுகளாவது வேண்டும்

இந்த தண்டனை இந்தியா எங்கும் பரவட்டும், குறிப்பாக தமிழகத்தில் உடனே வரட்டும்


செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு : நாசா அறிவிப்பு

தமிழகத்து ஏரிகள் நிறைய‌ காணாமலே போய்விட்டன, அதை நாசாவாலும் கண்டுபிடிக்கவே முடியாது.