மரியம் திரேசியா என்பவருக்கு புனிதர்பட்டம் வழங்கபட்டிருக்கின்றது

கேரளாவில் வாழ்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியா என்பவருக்கு புனிதர்பட்டம் வழங்கபட்டிருக்கின்றது

தனி சபையினையே உருவாக்கி பெரும் சேவையினை செய்தவர் திரேசியா, அவருக்கு நேற்று புனிதர் பட்டம் வழங்கினார் போப்

அன்னை தெரசா போன்ற வாழ்ந்த அந்த தேவதைக்கு புனிதர்பட்டம் மிக சரியானது
இந்திய சார்பில் நம் வெளியுறவுதுறை அமைச்சர் கலந்துகொண்டு சிறப்பித்தார்

இந்த கொண்டாட்டத்தை மோடி வரவேற்றிருக்கின்றார் ,மோடி தன் செய்தியில் “இந்தியர் ஒருவரின் சேவைக்கு உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை , முன்மாதிரி வாழ்வு வாழ்ந்த அந்த இந்திய பெண்மணிக்கு புகழாஞ்சலி” என சொல்லியிருக்கின்றார்

அவருக்கு புனிதர்பட்டம் வழங்கபட்டதால் அவரிடம் வேண்டும் வேண்டுதல் பலிக்கும் என்பது கத்தோலிக்க நம்பிக்கை

அந்த புனித மரியம் திரேசியாவிடம் நாம் இப்படி வேண்டிகொள்ளலாம் “புனித மரியம் திரேசியாவே இந்தியாவுக்காக வேண்டிகொள்ளும்”