மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் பெயர் போன சமூகம் தமிழ் சமூகம்
மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் பெயர் போன சமூகம் தமிழ் சமூகம்
சபையில் எந்த வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும், எதனை பயன் படுத்த கூடாது என்ற வரையறை அச்சமூகத்திடம் இருந்தது, இதனால்தான் பழம் செய்யுள்களில் எல்லாம் அமங்கலமான, அசிங்கமான வார்த்தைகள் இருந்ததில்லை
மலம் கழித்து வருதல் என்பதை கூட கால் கழுவி வருதல் என மிக நாகரீகமான சொன்ன சமூகம் இது
அப்படிபட்ட சமூகம் பகுத்தறிவில் மூழ்கி இப்பொழுது கோவில் சிலைக்கு மாத தீட்டு உண்டா? என விவாதிக்கும் அளவு தரம் கெட்டு போயிற்று
பகுத்தறிவு என்பது முன்னோர்கள் கட்டி காத்த நாகரீக கலாச்சாரத்தை குழிதோண்டி புதைப்பது என இவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள்
அதை சொன்னவன் ஒரு தொலைகாட்சியின் நெறியாளனாம், இச்சமூகம் எப்படி சீர்கெட்டு போயிற்று என்பதற்கு இதனை விட உதாரணமில்லை
பெண்மையின் தன்மையினை இப்படி கொச்சைபடுத்துவது என்பது காரி துப்ப வேண்டிய விஷயம்.
பெரும் நாகரீக வீழ்ச்சியினை இச்சமூகம் சந்தித்துவிட்டது, அதிலிருந்து இதனை மீட்டெடுத்தல் வேண்டும்
இந்துக்களை இப்படி பகிரங்கமாக பகுத்தறிவு கேள்வி கேட்கும் அந்த குறைமதியோன், குறுக்கு மூளைக்காரன் இஸ்லாமிய, கிறிஸ்தவ தெய்வங்களை கேட்க தயாரா?
அதிகம் வேண்டாம் இயேசு எவ்வளவு நாள் சிலுவையில் தொங்கி கொண்டே இருப்பார் என ஒரு கேள்வி கேட்க முடியுமா?
பொதுவெளியில் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் கண்ணியம் வேண்டும், வார்த்தை பிரயோகங்களில் கவனம் வேண்டும்
அது தெரியாதவர் பொது மேடைக்கு வர தகுதி அற்றவர், அவருக்கு ஏற்ற தொழில் சாக்கடையில் பன்றி மேய்த்தல்
அவர் அதனை ஒழுங்காக செய்தல் அவருக்கு நலம், இச்சமூகத்திற்கு இன்னும் நலம்