மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் , நோயாளிகள் தவிப்பு

மத்திய அரசின் புதிய மருத்துவ கொள்கையினை கண்டித்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் , நோயாளிகள் தவிப்பு

என்ன புதிய மருத்துவ கொள்கை?

தேசிய மருத்துவ கவுன்சிலில் சில மாற்றங்களை செய்து தேசிய மருத்துவ ஆணையம் மத்திய அரசு அமைத்திருக்கின்றது , மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ முறைகேடுகளை தடுக்க செய்யபடும் ஏற்பாடு என்கின்றது மத்திய அரசு

இந்த புதிய கொள்கைபடி சித்தா, அலோபதி மருத்துவர்களும் பயிற்சி இருந்தால் சிகிச்சை அளிக்கலாமாம் இன்னும் ஏராள விஷயங்கள்

இதனால் டாக்டர்களின் வருமானம் பாதிக்கபடுவது உறுதி, விடுவார்களா பொங்கிவிட்டார்கள்

பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என அழுகின்றார்கள், இவர்களிடம் சிக்கி மக்கள் படாத பாடா? அவ்வளவு அக்கறை உள்ளவர்களா இவர்கள்? கறக்கும் பணம் என்ன?

நோயாளிகளை மறந்து புரண்டு அழுது கடும் அழிச்சாட்டியம், பாவம் நோயாளிகள் அவர்கள் அம்மா, அய்யோ என அலற இவர்களும் கூட சேர்ந்து அழுகின்றார்கள்

அழும் அழுகையில் யார் டாக்டர், யார் நோயாளி என்றே தெரியவில்லை

இந்த பிரச்சினைக்கு தமிழக அமைச்சர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் என்றால் இப்படித்தான்

“மாண்புமிகு அம்மா, இதய தெய்வத்தையே காக்கமுடியாமல் , நிறைய பொய் சொல்லி ஏமாற்றி கைவிட்ட டாக்டர்கள் இவர்கள், என்ன படித்தார்களோ தெரியாது, இதில் வருமானம் குறையும் என்றவுடன் கோபம் வேறு வருகின்றது..” என சொல்லிவிட்டு மத்திய அரசு வாழ்க என மறக்காமல் சொல்வார்கள்

போராட்டம் வெடிக்கின்றது, மருத்துவர்கள் இப்படி நோயாளிகளை கைவிட்டு போராடுவது அவர்கள் தொழிலுக்கும் , தரத்திற்கும் அழகல்ல‌

நாளையே காவல்துறை இப்படி குற்றவாளிகளை கண்டுகொள்ளமாட்டோம், சிறையில் காவல் இருக்கமாட்டோம் என அறிவித்தால் நாடு தாங்குமா? அங்கிள் சைமன் ஓடி சென்று முதல்வர் நாற்காலியில் அமரமாட்டாரா?

டாக்டர்கள் செய்வது நிச்சயம் அராஜகம், உயிர்காக்கும் தொழிலில் இருந்துகொண்டு இப்படி செய்வது சரியல்ல‌

இதுபற்றி இன்னும் பிரபல டாக்டர்களான தமிழிசை, ராமதாஸ், அன்புமணி எல்லாம் வாய்திறக்கவில்லை, காரணம் மருத்துவம் பார்த்து பிழைக்கும் நிலையிலா அவர்கள் இருக்கின்றார்கள்??