மருத்துவ உலகம் போராட வந்திருக்கின்றது
கல்கத்தாவில் நடந்திருப்பது நிச்சயம் மாபெரும் கொடுமை, காட்டுமிராண்டிதனம்
82 முதியவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் உள்ளே புகுந்து மருத்துவர்களின் மண்டையினை அடித்து உடைத்திருக்கின்றது
ஒரு இளம் மருத்துவர் இறந்தே விட்டார், இன்னும் சில மருத்துவருக்கும் செவிலியருக்கும் படுகாயம், சிலர் பிழைப்பது சிரமம் என்கின்றார்கள்
அது போக ஏக கலவரங்களை செய்திருக்கின்றது, காவல்துறையும் அதை தடுக்கவில்லை
மேற்குவங்கம் குண்டர்களின் கூடாரமாக ஆகிவருகின்றது என்பது சோகம் எனினும் இந்த மருத்துவர் உயிரிழந்திருப்பது மிக பெரும் காட்டுமிராண்டிதனம்
இதனை கண்டித்து மருத்துவ உலகம் போராட வந்திருக்கின்றது
அவர்களும் மனிதர்களே, அவர்களும் படாதபாடு படுகின்றார்கள். தூக்கமில்லை உணவில்லை இன்னும் ஏராளமான நெருக்கடிகள் அவர்களுக்கும் உண்டு
மருத்துவ உலகம் பணக்கார உலகமாகிவிட்டது, செலவு அதிகரித்துவிட்டது என பொங்குவோர் யார் மேல் பொங்க வேண்டும்?
தவறான மருத்துவ கொள்கைகளை வைத்திருக்கும் அரசாங்கம் மீது பொங்க வேண்டும்
அரசு முறையான காரியங்களை செய்யாதபொழுது அல்லது மருத்துவத்தை தனியாரிடம் தாரை வார்க்கும் பொழுதே சிக்கல் தொடங்குகின்றது
இன்சூரன்ஸ் உதவி இன்னபிற உதவி என சமாளிக்கும் அரசுகள் தனியார் மருத்துவமனையினை கையகபடுத்தி நேரடியாகவே நல்ல சிகிச்சை கொடுக்கலாம்
ஆனால் செய்யமாட்டார்கள்
ஆக பெரும் தவறு அரசாங்கம் மேலிருக்க தனியார் மருத்துவர்களை சாடுவது தவறு
இன்றும் பாருங்கள் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர் இல்லை, பழனிச்சாமி அரசு இன்னும் நியமிக்கவில்லை
30 பேரை பார்க்க வேண்டிய மருத்துவர் 300 பேரை பார்க்கின்றார், அது சில நேரம் 500ஐயும் தாண்டுகின்றது
இதெல்லாம் நல்ல சிகிச்சையினை கொடுக்குமா? இல்லை மருத்துவரே நோயில் விழமாட்டாரா?
மருத்துவர்கள் பக்கமும் பல நியாயங்கள் இருக்கின்றன
எந்த விலை உயரவில்லை?
உணவு, உடை, வீடு, பள்ளி , சினிமா டிக்கெட் என எல்லா விலையும் உயரும் நாட்டில் மருத்துவ செலவும் உயர்வது எப்படி தவறாகும்?
சரி, விஷயத்துக்கு வருவோம்
கல்கத்தா சம்பவத்தினை கண்டித்து நாடு முழுக்க இன்று மருத்துவர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்கின்றார்கள்
ஆனாலும் மனிதாபிமானமிக்க அவர்கள் அவசர சிகிச்சைக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கின்றார்கள்
கவனிக்கவும் செவிலியர் பணியில் உண்டு, அதே நேரம் அவசரம் என்றால் மருத்துவரும் வருவார்
எனினும் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை வலியுறுத்தியும், சக மருத்துவரின் கொலைக்கு நீதிகேட்டும் அந்த மருத்துவ உலகம் களமிறங்குகின்றது
இனியாவது மருத்துவர்கள் காக்கபடட்டும்
கல்கத்தாவில் முரடர்களும் முட்டாள்களும் அதிகரித்துவிட்டனர், அவர்களின் சுபாவம் மாறி அடிமுட்டாள்களாக ஆகிவிட்டனர்
இல்லை என்றால் கம்யூனிஸ்டுகளும் இந்த மம்தாவும் எப்படி ஆள முடியும்?
கம்யூனிசம் ஒரு வெறிபிடித்த கூட்டத்தை உருவாக்கும், வயிற்ற்க்கு சோறு போட்டு மூளையினை மழுங்கடிக்க சொல்லும் என்பது வங்கத்தில் உண்மையாயிற்று
அந்த மருத்துவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். ஒரு மருத்துவனை கொன்று, அதாவது பின்னாளில் ஏராளமான உயிர்களை காக்க போகும் ஒரு மருத்துவனை கொன்று ஏராளாமன கொலைகளுக்கு ஈடான காரியத்தை செய்திருக்கின்றது அந்த கொடூர கூட்டம்
ஒரு தென்னைமரம் பல ஆண்டுகளுக்கு பயன்கொடுக்க கூடியது, அது சரிந்துவிட்டால் எத்தனையோ ஆயிரம் இளநீரும் தேங்காயும் தடுக்கபடுகின்றது என்பது பொருள்
ஒரு ஆலமரம் சரிக்கபட்டால் பல்லாயிரம் பறவைகள் அடைக்கலமின்றி அலைமறிக்க போகின்றன என பொருள்
ஒரு மலை உடைக்கபட்டால் ஏகபட்ட மூலிகைகள் அழிந்து ஏராளமான மக்கள் மருந்தின்றி அவதிபடபோகின்றனர் என பொருள்
ஒரு குளமும் கிணறும் மூடபட்டால் ஏகபட்ட மக்கள் தாகத்தால் சாக போகின்றார்கள் என பொருள்
ஆம் ஒரு மருத்துவனின் மரணம், பெரும் ஜனங்களின் மொத்த மரணம்..
அவ்வகையில் மருத்துவ சமூகம் நியாயம் கேட்பது சரியே
அந்த மருத்துவ சமூகத்தின் நியாயமான கோரிக்கை அங்கீகரிக்கபட வேண்டியதே
நல்ல மருத்துவன் எப்படி இருப்பான் என்பதற்கு யூதபழமொழி அழகாக சொல்கின்றது
“மருத்துவன் என்பவன் கடவுளால் அனுமதிக்கபட்டவன், ஒவ்வொரு மனிதனும் மருத்துவன் கையில் விழவேண்டிய காலம் உண்டு
பயிர்தொழில் போலவே மருத்துவமும் கடவுளால் உருவாக்கபட்டு மருத்துவனிடம் கொடுக்கபட்டிருக்கின்றது
மனிதனே, நீ அவன் கையில் விழும் நாளில் ஆண்டவரை வேண்டிக்கொள், உன்னை மருத்துவனிடம் விழ செய்பவர் அவரே என்பதை மறக்காதே
நல்ல மருத்துவனும் ஆண்டவரிடம் உனக்காக வேண்டிகொண்டே உனக்கு மருந்திடுவான்
எனினும் ஒன்றை நினைவில் கொள், போகும் உயிரை தடுக்க எந்த மருத்துவனாலும் முடியாது, அது எல்லாம் வல்ல கடவுளின் விருப்பமே”
ஆம் இது யூதரை தாண்டி மேற்காசியா முழுக்க பரவியிருந்த நம்பிக்கை
தன் 33ம் வயதில் உலகை வென்ற அலெக்ஸாண்டர் தன் இறுதி கணங்களில் சாவை உணர்ந்து செய்ய வேண்டியதை செய்துவிட்டு தன் தளபதிகளிடம் சொன்னான்
“நான் இறந்தபின்னால் என் உடல் அருகே கடைசி நொடிவரை ஒரு மருத்துவனை நிறுத்துங்கள், போகும் உயிரை எந்த மருத்துவனாலும் நிறுத்தமுடியாது என்பதை என் ராஜ்யத்தின் எல்லா மக்களும் அறிந்து கொள்ளட்டும்”
ஆம் மருத்துவர்கள் என்பவர்கள் தங்களால் முடிந்த சிகிச்சையினை செய்பவர்கள், எல்லா மருத்துவரும் ஒரு உயிரை காக்கவே படாதபாடு படுகின்றனர்
அது வெற்றியோ இல்லை தோல்வியோ அது கடவுளின் சித்தமன்றி வேறல்ல..
இந்தியாவின் ஒவ்வொரு மருத்துவருக்கும் முழு பாதுகாப்பும் நல்ல அமைதியான சூழலையும் உருவாக்கிதர வேண்டியது அரசின் கடமையாகும்
போராட்டம், புரட்சி, எவனையாவது கையினை காட்டி அவனே உன் எதிரி என ஒரு வெறிபிடித்த கூட்டத்தை உருவாக்கினால் என்னாகும் என்பதற்கு வங்கம் மிக சிறந்த உதாரணம்..
“வயிற்றுக்கு சோறு போட்டு மூளையினை மழுங்கடித்து எல்லோரையும் சோம்பேறியாக்கு” எனும் அந்த தத்துவம் இப்படித்தான் பெரும் மூளைகெட்ட வெறியர்களை உருவாக்கும்