மர்மமா?
அபினந்தன் பாகிஸ்தானுக்கு அரசியல் பயணம் செல்லவில்லை, மாறாக கைதுசெய்யபட்டு வெளியில் விடபட்டிருக்கின்றார்
இதனால் அவர் முடிக்க வேண்டிய ராணுவ சம்பிரதாயங்கள் நிறைய உண்டு
முதலில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கும் அதன் பின் அவர் பாகிஸ்தானில் எதிர்கொண்ட சிக்கல்கள் அனுபவங்கள் என பல விசாரிப்புகள் நடக்கும்
அதில் பல ஆவணபடுத்தபடும் பல ஆவணபடுத்தமாட்டாது
நிச்சயம் அபினந்தன் நாட்டுபற்று மிக்கவர் சந்தேகமில்லை, ஆனால் எதெல்லாம் அவர் சொல்லியிருக்க கூடும் எதை சொல்லியிருக்கமாட்டார் என்றேல்லாம் பல கோண விசாரணை உண்டு
அடுத்து அவரின் மனநலம் எப்படி இருக்கின்றது, தொடர்ந்து இயங்க அவர் மனம் ஒத்துழைக்குமா? இல்லை வேறுபணிக்கு மாற்றலாமா என பல விஷயங்கள் பார்க்கபடும்
இன்னும் ஏராளம் உண்டு , அதன்பின்பே அபினந்தன் வீட்டிற்கு அனுப்பபடுவார், எல்லாம் ஓகே என்றால் அவர் ராணுவத்தில் தொடரலாம்
ஏன் இவ்வளவு சிக்கல் என்றால் விஷயம் அப்படி
எதிரிநாட்டில் சிக்கும் வீரர்களை கடும் மூளை சலவை எல்லாம் செய்வார்கள், மிக நல்லவர்களாக நடித்து அவர்கள் மனதை மாற்றி அல்லது மிரட்டி ஒருமாதிரி ஆக்கி உளவாளியாகவோ இல்லை வேறு ஏதுமாகவோ ஆக்கிவிடுவார்கள்
ஆம் கைது செய்யபடும் வீரர்களுக்கு இருட்டு அறையினை தவிர ஏதும் தெரியாது , உணவு தவிர ஏதும் கிடைக்காது
இந்திய பாகிஸ்தான் அதிகாரிகள் பேசுவதை இவர்களுக்கு யாரும் சொல்லவும் மாட்டார்கள் என்பதால் கைதி மனதால் குழம்பி, தன்னை தேசம் கைவிட்டுவிட்டது எனும் விரக்தியில் மனம் உடைய நேரிடும்
இதை எதிரி நாடுகள் நான் உன்னை விடுவிக்கின்றேன் உன் தேசம் உன்னை தேடவே இல்லை ஆகையால் நான் சொன்னதை செய்வாயாக என மனதை மாற்றிவிடுவார்கள்
பல நாடுகளில் இது நடந்தது, இதனால்தான் ஒருமுறை எதிரியிடம் சிக்கி மீண்ட வீரன் மேல் பல கண்கள் எப்பொழுதும் உண்டு, சர்வதேச நடைமுறை இது
வெறும் 3 நாட்களே இருந்ததால் அபிக்கு இப்படிபட்ட சிக்கல் வராது
இதனை போல சுவாரஸ்ய சம்பவம் நிறைய உண்டு
இதே பாகிஸ்தானுடம் நடந்த போரில் 1971ல் பல வீரர்கள் பாகிஸ்தானிடம் சிக்கினர் அவர்களை பாகிஸ்தான் சிறையில் போட்டது
கொஞ்சகாலம் ஆனது , வீரர்களுக்கு இந்தியா தங்களை மீட்கும் என்ற நம்பிக்கை உடைந்தது, பாகிஸ்தான் அதிர்காரிகளும் உங்கள் தேசம் உங்களை தேடவில்லை, நீங்கள் இங்கே சாக வேண்டியத்துதான் என சொல்லிகொண்டே இருந்தார்கள்
ஒருநாள் பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ வந்தார், அவர்களிடம் உருக உருக பேசினார்
“உங்கள் நாட்டுக்கு உங்கள் மேல் அக்கறை இல்லை, உங்கள் குடும்பம் பற்றி கவலை இல்லை. உங்கள் குடும்பம் வறுமையில் வாடி மிக துயரபடுகின்றது
அந்த தேசம் அப்படித்தான், ஆனால் நாங்கள் நல்லவர்கள், இன்னொரு நாடென்றால் உங்களை என்றொ கொன்றிருக்கும் ஆனால் சத்தியம் தர்மத்தை காக்க அவதரித்திருக்கும் பாகிஸ்தான் அதை செய்யாது
நீங்களும் வாழவேண்டும் என்பதால் கருணையோடு வெளிவிடுகின்றேன், பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருங்கள்” என பேசி விடுதலை செய்தார்
அவர்கள் மனம் நிறைய வெறுப்போடு எல்லைக்கு வந்தனர்
அங்கே இந்திய ஜனாதிபதி ஜெயில்சிங்கும் லட்சகணக்கான மக்கள் அவர்களை ஆரதழுவி வரவேற்றனர்
ஏகபட்ட உதவிகள் குவிந்தன
நடப்பது புரியாமல் குழம்பி தவித்தர் வீரர்கள், அவர்களுக்கு இந்தியா அவர்களை மீட்க செய்த உதவிகள் எல்லாம் ஆவணமாக காட்டபட்டன
அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் சாட்சிகளாய்ய் நின்றனர்
தங்களை கைவிடாத தேசம் செய்த எல்லா விஷயங்களையும் கண்ட வீரர்கள், பாகிஸ்தான் சிறையில் தங்கள் மனதை கரைக்க முயன்ற அயொக்கியரை நொறுக்க மறுபடியும் துப்பாக்கி தூக்கினர்
இப்படி எல்லாம் பல குழப்ப வேலைகளை பாகிஸ்தான் செய்யும் என்பதால் அபினந்தன் பல கட்டங்களை தாண்டிவர வேண்டும் அவர் வரட்டும்
இப்போது கடைசி செய்தி என்ன தெரியுமா? தங்களை பற்றி நல்லவிதமாக சான்றிதழ் கொடுக்கும்படி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அபினந்தனை வற்புறுத்தியதாக செய்திகள் வருகின்றன
ஏன் அப்படி செய்தது ஐஎஸ்ஐ? பாகிஸ்தான் ராணுவமும் சிறையும்தானே அதை கேட்க வேண்டும்?
ஆக அவர் விழுந்த, தாக்கபட்ட இடத்தில் ஏதோ ஐஎஸ்ஐ மர்மம் இருக்கின்றது அப்படித்தான்?