மறுபடியும் சென்னையில் ஒருதலைகாதல் கொலை

மறுபடியும் சென்னையில் ஒருதலைகாதல் கொலை

என்ன யழவோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் எரிந்து சாகும் கொடூர செய்திகளே தொடர்ந்து வருகின்றன‌

இந்த சைக்கோ பயலும் அந்த பெண்ணை குடும்பத்தோடு கொளுத்தியிருக்கின்றான், இதுவரை நடந்த கொலைகளில் மிக கொடூரமானது இது

அவள் ஒரு பெண் , அவளுக்கும் மனம் உண்டு, உரிமை உண்டு. இவனை காதலிக்கவில்லை என சொல்ல அவளுக்கு பூரண உரிமை உண்டு

இவன் என்னமோ சென்னை நாட்டு மன்னன் போலவும், அந்த பெண் இவனின் அடிமை கூட்டத்தில் ஒருத்திபோலவும் கருதிய இந்த கொடியவன் எரித்தே விட்டான்

அப்பெண் இறந்துவிட்டாள் , குடும்பத்தார் உயிருக்கு போராடிகொண்டிருக்கின்றனர்

எந்த நாட்டிலும் இல்லா விசித்திர வெறியாட்டங்கள் இங்கு நடக்கின்றன, இது மிக மிக மட்டமான கொடூரமான சமூகமாக இது மாறிகொண்டிருக்கின்றது

இந்த குற்றங்கள் களையபட தனி துறையும், தனி சட்ட பிரிவும் ஏற்படுத்துதல் வேண்டும்

கொஞ்சம் யோசித்தால் ஒரு விஷயத்தை கவனிக்கலாம்

ஒரு சில மிரட்டல்களுக்கு பின்பே இந்த கொடுமைகள் அரங்கேறியிருக்கும், முதலிலே நடக்க வாய்ப்பில்லை

அந்த மிரட்டல் காலங்களிலே இந்த சைக்கோக்களை அடையாளம் கண்டு, காவல்துறை உதவியோடோ இல்லை வேறு வழியிலோ இதனை தடுக்க வேண்டும்

இச்சம்பத்தை செய்தவனை மதுரை வீரன் போல ஆக்கி சமூகத்தில் உலவவிட்டால் கொஞ்சம் வருங்கால சைக்கோக்கள் அடங்க வாய்ப்பிருக்கின்றது