மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர்
மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர்
இவரையும் மதித்து தாகூர் விழாவில் பேச அழைத்திருக்கின்றார்கள்
மனிதர் சென்று என்ன சொல்லியிருக்கின்றார் என்றால் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக தன் நோபல் பரிசையே திரும்ப கொடுத்தார் தாகூர் என அளந்துவிட்டிருக்கின்றார்
தாகூர் நோபல் பரிசை கொடுக்கவில்லை, ஜாலியன் வாலாபாக் படுகொலையினை மறைக்க தாகூருக்கு வீரகவிஞன் எனும் பட்டம் கொடுக்க முயன்றபொழுது அதை மறுத்தார்
காரணம் வாங்கியிருந்தால் வீரவணக்கம் செலுத்தும் நிலை வந்திருக்கும்
இதனால் அவர் அந்த விருதை மறுத்தாரே அன்றி, நோபலை எல்லாம் திரும்ப கொடுக்கவில்லை
திரிபுரா முதல்வரின் காமெடி தொடர்கின்றது, மோடிக்கு எரிச்சல் கூடுகின்றது
ஏற்கனவே அழைத்து கண்டித்தபின்பும் அன்னார் திருந்தவில்லை
இனி மோடி டெல்லிக்கு வந்து இவரை முழங்காலில் நிற்க சொல்வார் என்பது மட்டும் புரிகின்றது
அப்பொழுதும் திரிபுரா முதல்வர் திருந்துவாரா? கூட்டத்தை கண்டவுடன் அவருக்கு ஒரு மயக்கம் வந்துவிடுகின்றது, அது அவர் அறிந்து செய்யும் தவறல்ல
கட்சி கொடுத்திருக்கும் பயிற்சி அப்படி