மறுபடியும் மீனவர் பிரச்சினை….

https://youtu.be/o11m1GBNmkI

கச்சத் தீவை மீட்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இரு நாட்களுக்கு முன்பு 7 தமிழர்கள் விடுதலை செய்யபடவேண்டும் என்றார்

ஸ்டாலினுக்கு என்னமோ ஆகிவிட்டது , ஒருமாதிரி பேசிகொண்டிருக்கின்றார்.

மீணவர்கள் பிரச்சினையில் அன்று கலைஞர் சொன்னது உண்மை, பேராசை பட கூடாது என அவர் சொன்னது, கூலிக்கு மீணவர்களை பயன்படுத்தும் பெரும் மீன்வியாபாரிகளை பற்றியது, அது புரியவேண்டியவர்களுக்கு புரியும்.

உண்மையில் தமிழக மீணவர்களை இலங்கை கடற்படை பெரும் காரணமின்றி சுட்டால் என்றோ இந்திய கடற்படை களமிறங்கியிருக்கும்,

இது ஒருவிதமான பிண்ணணியுடன் நடக்கும் பிரச்சினை, கச்சதீவு மட்டும் அல்ல, அல்லவே அல்ல.

திரிகோணமலையில் இந்திய ஆயில்குடோன் கட்டுபாடு அதுபோக இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு, இந்தியா அமைதிகாக்க பல காரணம் உண்டு.

இதன் பிண்ணணியில் இந்தியா அடிப்பதும், சில நேரம் இலங்கை சீண்டுவதும் சர்வதேச விவகாரங்கள். வீதிக்கு வராதவை

இந்தியா அமைதிகாப்பதாக காணப்படும் தோற்றத்தில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு

மோடி அரசும் சும்மா அல்ல, குளச்சல் பக்கம் பெரும் துறைமுகம் கட்டுகின்றது, சேது சமுத்திர பக்கமும் அடிக்கடி சோதனைகளை நடத்துகின்றது

அதாவது இணையத்தில் பெரும் துறைமுகம் கட்டி, சேதுசமுத்திரத்தை தோண்டிவிட்டால் போதும், இலங்கையின் கொழும்பு தானாக சிறப்பிழக்கும்

பெரும் கப்பல்கள் இணயம் வந்து சேதுசமுத்திரம் வழியாக கொழும்பினை தவிர்த்து செல்லமுடியும், இலங்கையினை இதனை விட வலுவாக அடிக்கவே முடியாது, இது அதன் முதுகெலும்பினை ஒடிக்கும் முயற்சி

இப்படி ஆயிரம் யோசனைகளில் இந்தியா இருக்கும்பொழுது, அது மீணவர் பிரச்சினையினையும் எதிர்கொள்கின்றது.

உண்மையில் மீன் வளம் அவர்கள் எல்லைக்குள் அதிகம் உண்டு, தமிழக மீணவர் பக்கமும் சில‌ தவறுகள் உண்டு, கச்சதீவினை மீட்டுவிட்டாலும் இப்பிரச்சினை முடியாது, தீரவே தீராது

மோடி நேற்று அறிவித்திருக்கும் திட்டம் உண்மையில் வாழ்த்துகுரியது

மீணவர்களுக்கு நவீன படகுகள் வாங்க 1 கோடிவரை கடனுதவி அளிக்கபடும் என்கின்றார், இது அந்த குறுகிய பகுதியினை தவிர நம் மீணவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வழிவகுக்கும்

மோடி இவ்வளவுதான் செய்யமுடியும், அவரே வந்து மீன் எல்லாம் பிடித்துகொடுக்கமுடியாது

மத்திய அரசு இப்படி நல்ல திட்டங்களை அறிவிக்கும்பொழுது ஸ்டாலின் இப்படி புலம்புவது சரி ஆகாது

7 பேரும் விடுதலை செய்யபடவேண்டும் என நேற்று சொன்னார், ஈழபிரச்சினையில் திமுகதான் காரணம் எனும் வெற்றுவாதத்தை தமிழகம் என்றோ புறந்தள்ளிற்று

ஒருகாலும் ஈழசிக்கல், ராஜிவ் கொலை கைதி விவகாரம் எல்லாம் திமுகவிற்கு கொஞ்சமும் பின்னடைவல்ல‌

ஆக இவர் 7 பேர் விடுதலை என்பது திமுகவின் வாக்குவங்கியினை குறைக்குமே ஒழிய கூட்டாது

அல்லக்கை கட்சிகள், 1 % வாக்குவங்கி கூட இல்லா அனாமுத்து கட்சிகள் கச்சதீவு, மிச்சதீவு, 7 பேர் என புலம்பும்

ஆனால் மிக பிரதான கட்சியான திமுக அப்படி சொல்வது சரியல்ல, அது மிக மிக யோசித்தே சொல்லவேண்டும்

கலைஞர் ஒரு வார்த்தை சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும், காரணமின்றி அவர் ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டார்.

பயனில சொல்லாமை எனும் குறள்படி கட்சி நடத்தியவர் அவர்

ஸ்டாலின் இந்த 7 பேர் விடுதலை, மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிக்கும் நேரத்தில் கச்சதீவு மீட்பு என்பதெல்லாம் நல்ல அரசியல் அல்ல‌

அது திமுகவிற்கு நல்லதே அல்ல…