மலேசியாவின் பெரியவர் மகாதிர் முகதுதான் இன்று உலகில் ஹாட் டாபிக்

Image may contain: 2 people, glasses

காண்பதற்கு அச்சு அசல் பிரனாயி விஜயன் போல இருக்கும் மலேசியாவின் பெரியவர் மகாதிர் முகதுதான் இன்று உலகில் ஹாட் டாபிக்

மகாதிரின் முன்னோர்கள் கேரளாவினை சேர்ந்தவர்கள் என்பார்கள், தமிழக அரசியலில் கலைஞர் போல மலேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி மகாதிர்

22 ஆண்டுகள் மலேசியாவினை ஆண்டார். அவர் ஆட்சியில்தான் மலேசியாவின் முகம் மாறிற்று. நவீன அடையாளங்கள் அவராலே அந்த தேசம் பெற்றது

1998ல் கிழக்காசிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மலேசியாவினை காப்பாற்றியவர் என்ற பெருமை அவருக்கு என்றும் உண்டு

மலாய் மக்களுக்கு பெரும் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் என தமிழர் தரப்பில் சில முணுமுணுப்புகளும் உண்டு

இங்கு செய்தால் புரட்சி சீர்திருத்தம் ஆனால் மலேசியாவோ, சிங்களனோ செய்தால் தமிழர் விரோத இன வெறி

அதெல்லாம் கணக்கில் எடுக்க கூடாத வகை, நிச்சயம் மகாதீரின் ஆட்சி மலேசியாவிற்கு பல நன்மைகளை கொண்டு வந்தது

அடுத்த நூற்றாண்டு மலேசியா எப்படி இருக்கவேண்டும் என திட்டமிட்டு உருவாக்கி வைத்தது அவரின் ஆட்சி

பாலஸ்தீனருக்கு ஆதரவானவர் என்பதால் அமெரிக்க இஸ்ரேல் எதிர்ப்பினையும் சம்பாதித்தார்

ஆனால் அந்த எதிர்ப்பு நாட்டின் நலனை கொஞ்சமும் பாதிக்காதபடி அவரின் ஆட்சி அணுகுமுறை இருந்தது

மலேசியாவிற்கு நவீன முகம் அவரால் கொடுக்கபட்டது. பல மங்கா அடையாளம் இரட்டை கோபுரம் வரை அவரால் திட்டமிடபட்டது

மலேசியாவின் மிகசிறந்த பிரதமர் வரிசையில் அவருக்கு எந்நாளும் இடம் உண்டு

நாட்டை நல்ல வளர்ச்சிக்கு கொண்டுவந்த பின் ஓய்வுபெற்றார்

இப்பொழுது மறுபடியும் காட்சிக்கு வந்தார், ஆனால் இம்முறை எதிர்கட்சிகளோடு இணைந்து நின்றார்

நாடு அவருக்கு பேராதரவு கொடுத்து மலேசிய வரலாற்றில் முதன் முறையாக எதிர்கட்சி ஆட்சிக்கு வருமளவு ஆதரவு கொடுத்திருக்கின்றது

புகழின் உச்சியில் ஓய்வு பெற்றுவிட்டு , மறுபடியும் நாட்டில் சர்ச்சை அதிகரித்தவுடன் களத்திற்கு வந்து 92 வயதிலும் அவர் வென்று காட்டியதும் உற்று நோக்கபடுகின்றது, மனிதர் மீது மக்கள் கொண்டிருக்கும் அபிமானம் அப்படி தெரிகின்றது

ஆளும்கட்சியின் பெருந்தலைகளில் ஒருவர் வெளியேறி எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து அட்டகாசமாய் ஆட்சியினை பிடிக்கும் அதிசயம் அவரால் நடத்தி காட்டபட்டது

அவருக்கு வயது 92, இந்த வயதிலும் அவரே கார் ஓட்டுகின்றார் அவரே தனியாக‌ சுற்றி வருகின்றார்

பல இடங்களில் அவரை தனியாகவே பார்க்க முடியும், பெரும் ஆரவாரமின்றி எளிமையாக ஷாப்பிங் மால், ரயில் என சராசரி மனிதனாக வலம் வந்தார்

இந்த வயதிலும் அவர் சொல்லுக்கு மக்கள் கட்டுபடுகின்றார்கள். சந்தேகமே இல்லாமல் தான் மலேசியாவின் லீ குவான் யூ என நிரூபித்திருக்கின்றார்

மகத்தான வெற்றிபெற்றிருப்பதால் அவர் இனி பிரதமர் பதவி ஏற்பார், மக்கள் முகங்களில் பெரும் மகிழ்ச்சி

நல்ல அனுபவ தலைவர்கள் எப்பொழுது வந்தாலும் மக்கள் வரவேற்பார்கள், நமது கலைஞர் இப்பொழுது வந்து நின்றால் தமிழக காட்சிகள் மாறாதா? அப்படித்தான்

மகாதிரின் மகத்தான வெற்றி யாருக்கு மனதில் சுருக்கென்று குத்தும் என்றால் சாட்சாத் அத்வானிக்கு

அவருக்கும் மகாதீருக்கும் சில அரசியல் பொருத்தங்கள் உண்டு, பல விஷயங்களில் உண்டு

மகாதிர் முன்னாள் பிரதமரை கொண்டுவந்தது போலவே அத்வாணியும் கொண்டுவந்தார்

Image may contain: 2 people, people smiling, people sitting, glasses and indoorமோடிக்கு அத்வாணிக்கும் உரசல் வந்தது போலவே அங்கும் வந்தது, இதனால் மகாதிர் எதிர்கட்சியோடு இணைந்து அந்த ஆட்சியினை வீழ்த்திவிட்டார்

அதாவது தான் யாருக்கு வழிவிட்டாரோ அவரை 92 வயதில் வீழ்த்தியிருக்கின்றார்

இதனை நோக்கும் அத்வாணிக்கும் மோடிக்கு எதிராக திரும்பும் எண்ணம் வந்து எதிர்கட்சிகளோடு கை கோர்த்தால் எப்படி இருக்கும்?

எதிர்கட்சி என்றால் யார்? காங்கிரஸ்தான்

நாட்டு நலனுக்காக பல நாடுகள் அரசியல் விரோதங்களை மறந்து கைகோர்க்கின்றன, இந்தியாவில் அதெல்லாம் சாத்தியமில்லை

எனினும் அத்வாணி மகாதீர் முகமதுவினை பார்த்து யோசிக்கலாம், யோசித்துவிட்டு இன்னொரு முறை மசூதி இடிக்க ரதம் ஏறுவோமா என்ற முடிவுக்கு வராதவரை நல்லது

ஆனால் என்னால் கொண்டுவரபட்ட மோடியால் இந்நாட்டில் பல அசவுகரியங்கள் நிகழ்வதால் நானே அவரை வீட்டுக்கு அனுப்புகின்றேன் என ரதம் ஏறினால் நிச்சயம் வரவேற்பு கிட்டும்

மோடி மேல் பல அதிருப்திகள் அப்படி இருக்கின்றன‌

ஓய்வில் இருக்கும் அத்வானி, வாஜ்பாய் சிந்தனையினை மகாதீரின் வெற்றி உசுப்பியிருக்கலாம் வாய்ப்பிருக்கின்றது

மோடிக்கும் அத்வாணி மகாதீர் போல கிளம்பிவிட்டால் என்னாவது என்ற அச்சம் வந்திருக்கலாம்

தமிழகத்தில் அப்படி அனுபவ‌ பெரியோர் யாருமில்லை என்பதுதான் மகா சோகம்.

அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் எந்நாளும் தேவை என்பது பல விஷயங்களில் புரிகின்றது